ஒருவர் சுயமரியாதையுடன் வாழ்வ தற்கு அடிப்படைத் தேவை கல்வி யும், வேலையும். ஆனால், 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் கல்வியும், வேலை யும் கனவாகவே உள்ளது. உலகிலேயே அதி கமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், இத்தகைய இளைஞர் சக்தியை பயன்படுத்தும் வகையில் கொள் கைகளையோ அல்லது திட்டங்களையோ ஆட்சியாளர்கள் வகுப்பது இல்லை என்பது வேதனையான உண்மை. நம் கிராமங்களி லும் நகரங்களிலும் அதிக அளவில் இளை ஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலை செய்யும் வயதில் இருக்கும் பத்து இந்தியர்களில் நான்கு பேருக்கு வருடம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை. வருடத்திற்கு 30 நாட்கள் வேலையில் இருந் தாலே ஒருவர் வேலை உள்ளவர் என்று முடிவு செய்கிற யுபிஎஸ்எஸ் முறையை ஒன்றிய அரசு வேலையின்மை தகவலை வெளியிடும் போது பயன்படுத்துகிறது. இதன் மூலம் வேலை யின்மை அளவை குறைத்துக் காட்டுகிறது. உண்மையில் ஒவ்வொரு நாளும் வேலை யின்மைப் பிரச்சனை தீவிரமடைகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்க ளான ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்கில் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்றவை வெற்று அறிவிப்புகளே தவிர வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மறு புறம், இந்த அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகள் சிறு, குறு தொழில்களை சின்னாபின்னமாக்கியது. கொரோனா பெருந் தொற்றும், அதனை தடுப்பதற்காக என்று சொல்லி ஒன்றிய அரசு மேற்கொண்ட நட வடிக்கைகளும் ஒரு கோடிக்கும் அதிகமான சிறு, குறு தொழில் நிறுவனங்களை இழுத்து மூடச்செய்தது. பல கோடி பேர் வேலையை விட்டு துரத்தப்பட்டனர். அது மட்டுமின்றி, மோட்டார் வாகனத் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் மாதச் சம்பளம் பெற்றுவந்த லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பொதுவாக, சுருங்கி வரும் வேலை வாய்ப்புச் சூழலில் பட்டியல் சாதி, பழங்குடி மற்றும் சிறுபான்மை இளைஞர்கள் அதீதச் சோதனைகளை சந்திக்கின்றனர். ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு இடங்கள் பெருமளவில் நிரப்பப்படாமல் உள்ளன. இச்சூழலில் குறைவான சம்ப ளத்திலுள்ள தனியார் வேலைகள் மட்டுமே பட்டியல் சாதி, பழங்குடிகள் மற்றும் சிறு பான்மையினருக்குக் கிடைக்கிறது. தனியார் துறைகளில் இருக்கும் நல்ல வேலைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. வேலை யின்மையை உருவாக்கிய கொள்கைகள் சாதிய, மத பாகுபாடுகளையும் உருவாக்குகிறது.
தமிழகத்தில், 31-12-2021 வரை 75,31,122 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரி வித்துள்ளது. ஆனாலும், காலியாயுள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை யும் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அரசுத் துறை பணியிடங்களையும் முழுமை யாக நிரப்புவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் தலைமைச் செயலகம், கோவை மாநகராட்சி ஆகிய இடங்களில் துப்புரவுப் பணியிடங்களுக்கு முனைவர் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்டு ஆயி ரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித் தனர். இவையனைத்தும் வேலையின்மையின் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது. அரசின் திட்டங்களை மக்களிடம் எளி தாகக் கொண்டுசெல்லும் வகையில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான எண்ணிக்கையில் புதிய அரசு ஊழியர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும். ஆனால், கடந்த அதிமுக அரசு இருக்கிற அரசுப் பணி யிடங்களையும் ஒழிக்கும் வகையில் அர சாணை 56-ஐ பிறப்பித்தது. அரசு வேலை கிடைக்கும் என்ற இளைஞர்களின் நம்பிக் கையை இந்த அரசாணை தகர்த்தது.
பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அமலாக்கும் தனி யார்மய மற்றும் தாராளமயக் கொள்கைகள் தான் உலகம் முழுவதும் உள்ள வேலையின் மைக்குக் காரணம். துரதிர்ஷ்டவசமாக இத்த கைய நவீன தாராளமயக் கொள்கைகள் நம் நாட்டில் கொண்டாடப்பட்டது. இன்றளவும் ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. வேலையின்மைப் பிரச்சனைக்கு நிரந்த ரத் தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால், கார்ப்பரேட் கனவான்களின் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படும் நரேந்திரமோடி அரசு நிச்சய மாக வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு காணாது. அது மட்டுமின்றி, கார்ப்பரேட்டுக ளின் உழைப்புச் சுரண்டலை அதிகப் படுத்திட வேலையின்மைப் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் நடவடிக்கைக ளையே மேற்கொள்ளும்.
பிரச்சனையை திசைதிருப்ப பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். மதம், சாதி, பிராந்திய அடிப்படையில் மக்களை பிரித்து எதிரிகளாக்கி மோதவிடுகின்றனர். குறிப்பாக மத அடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல நேரங்களில் பிரதமரே அத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டதை நாம் கண் டோம். உண்மையில், ஒரு சதவிகிதம் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இவர்கள் வகுக்கும் கொள்கைகளும், திட்டங்களும் தான் பெரும்பகுதி இந்திய மக்களின் வறு மைக்கும், பட்டினிக்கும், வேலையின்மைக் கும் காரணம் என்பதை இளைஞர்கள் புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே வெறுப்பு விஷத்தை மீண்டும் மீண்டும் கக்குகிறார்கள். வேலையின்மையை உருவாக்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளை இளை ஞர்கள், மாணவர்களிடையே பிரச்சாரம் செய்யவும், பிரிவினை அரசியலுக்கு எதிராக ஒன்று திரட்டவும் சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், புதுச்சேரி என நான்கு முனைகளிலிருந்து திருச்சியை நோக்கி சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை நடத்துகி றது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இப்பயணங்களில் இராமநாதபுரம், தென் காசி, திருவள்ளூர், தேனி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, வேலூர் ஆகிய ஏழு மையங் களிலிருந்து புறப்படும் உப பயணக்குழுக்க ளும் இணைகின்றன. 2022 ஏப்ரல் 21 முதல் மே 1 வரை நடைபெறவுள்ள இப்பயணங்கள் தமிழகத்தின் குறுக்கு நெடுக்காக கிராமங்க ளிலும், நகரங்களிலும் பிரச்சாரம் செய்து மே 1இல் திருச்சியில் சங்கமிக்கின்றன. நமக்கான வேலைக்காக அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து போராடுவதற்கு தமிழக இளைஞர் சமூகத் திற்கு அறைகூவல் விடுக்கும் இப்பயணம் வெல்ல வேண்டும். நிச்சயம் வெல்லும்.
கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்