tamilnadu

img

புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வாலிபர், மாதர் சங்கம் முற்றுகை போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11 - திருச்சி உறையூர் கடைவீதி போக்கு வரத்து நெரிசலான பகுதியாகும். இப்பகுதி யில் புகழ்பெற்ற பஞ்சவர்ண சுவாமி கோயில், தர்கா உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள், வணிக வளா கங்கள் உள்ளபோதும் கடைவீதியில் அருக ருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல் பட்டு வருகின்றன.  இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு நடுவே கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் புதிதாக ஒரு டாஸ் மாக் கடை வியாழக்கிழமை திறக்கப் பட்டது. இதை கண்டித்தும், புதிதாக திறக்கப் பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட வலி யுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை புதிய டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தி ற்கு வாலிபர் சங்க கிளை செயலாளர்கள் ஹாஜா, ஜெய்லானி, தர்மா, மாதர் சங்க கிளை செயலாளர்கள் மாரியம்மாள், சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் ரேணுகா, உறையூர் பகுதி செய லாளர் லலிதா ஜான்சி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின், மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆகியோர் பேசினர். முற்றுகை போராட்டத்தில் வாலிபர், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் டாஸ்மாக் பொது மேலாளர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறையூர் பகுதி செயலாளர் சந்திரிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கார்த்திகேயன், உறையூர் காவல் உதவி ஆணையர், வாலிபர், மாதர் சங்கத்தி னர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை யில், கடை உடனடியாக வேறு இடத்திற்கு  மாற்றம் செய்யப்படும் என உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.