tamilnadu

img

விளையாட்டு...

சஞ்சு சாம்சன் சிக்ஸரால் இளம்பெண் காயம்

4 டி-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க  இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பி ரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டது. இந்த டி-20 தொடரின் கடைசி டி-20 ஆட்டம் வெள்ளியன்று நடைபெற்ற நிலையில், திலக் வர்மா (120), சஞ்சு சாம்சன் (109 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான சதத்தின் உத வியால் 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,  3-1 என்ற கணக் கில் டி-20 கோப்பையை கைப்பற்றி யது. கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி சிக்ஸர் மழை பொழிந்த நிலை யில், கேரள வீரர் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸரால் மைதான பார்வையாளரான இளம்பெண் ஒருவர் காயமடைந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் அரங் கேறியது. இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்சின் பொழுது 10ஆவது ஓவரை தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன்  சிக்ஸர் விளாசினார். ஆனால் பந்து துரதிர்ஷ்டவசமாக மைதானத்தின் தடுப்பு கம்பியில் பட்டு, பார்வையா ளரான இளம்பெண் முகத்தில் பலமாக தாக்கியது.  மன்னிப்பு கோரினார் சஞ்சு பந்து தாக்கியதால் இளம்பெண் வலியால் துடித்து அழுதார். சக பார்வை யாளர் இளம்பெண் கன்னத்தில் ஐஸ் கட்டி வைத்து பிடித்து முதலுதவி மேற் கொண்டார். முன்னதாக இளம்பெண் முகத்தில் பந்து தாக்கியவுடன் சஞ்சு சாம்சன் மன்னிப்புக் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குத் தெரியுமா?  லெக் திசை ஆபத்தானது

டெஸ்ட் போட்டிகளை விட டி-20, ஒருநாள் போட்டிக ளில் லெக் திசையில் அம ருவது பாதுகாப்பானது கிடையாது. காரணம் கிரிக்கெட் உலகில் இடதுகை பேட்டர்களை, விட வலதுகை பேட்டர் களே அதிகம். இதனால் லெக் திசை யில் சிக்ஸர்கள் அதிகளவில் பறக்கும். இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் பற்றி நன்கு அறிந்தவர்கள் கேட்ச் பிடிக்கும் ஆசையில் லெக் திசையில் அதிகம் அமருவார்கள். பெண்கள், சிறுமிகள் அவ்வளவாக அமர மாட்டார்கள். டிக்கெட் கிடைக்காத பிரச்சனையால் பாதுகாப்பை உணரா மல் குடும்பத்துடன் லெக் திசையில் அடி வாங்கியவர்கள் ஏராளம். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பந்து தாக்கியதில் பெண்கள் உட்பட படுகாயமடைந்த வர்கள் எண்ணிக்கை 30க்கும் அதிக மாக உள்ளது. இதன் காரணமாகவே கிரிக்கெட் மைதானத்தில் லெக் திசை ஆபத்தானது என கூறப்படுகிறது. ஆனால் லெக் திசையாக இருந்தா லும் சரி, ஆப் திசையாக இருந்தா லும் சரி கிடைமட்டமாக (45 டிகிரி அள வில்) பறக்கும் சிக்ஸர்கள் உயிரி ழப்பை கூட ஏற்படுத்தும். காரணம் கிடைமட்டமாக செல்லும் சிக்ஸர்கள் 160 கிமீ-க்கும் கூடுதலான வேகத்தில் பறக்கும் என்பதால், பந்தின் அடி பலமாக இருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்

58 வயதான முன்னாள் ஹெவி வெயிட் சாம்பி யன் மைக் டைசன் மற்றும் 27 வயதான சமூக வலைதள பிரபலமாக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் இடையேயான, தொ ழில்முறை குத்துச்சண்டை போட்டி இந்திய நேரப்படி சனியன்று காலை நடை பெற்றது.   அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் “ஏடி அண்ட் டி” விளையாட்டு  அரங்கில் நடைபெற்ற இந்தப்  போட்டியின் தொடக்கத்தில் டைசன் தாக்குதல் தொடுத் தாலும், சுதாரித்துக் கொண்ட பால் 80-72 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.  தொழில்முறை குத்துச்சண்டையில் ஜாம்பவான் மைக் டைசன், 50 போட்டி களில் மோதி 44இல் பிரம்மாண்ட வெற்றி களை குவித்துள்ளார். இடிபோல் இறங்கும் அவரது குத்துக்களால் நிலை குலைந்து இதுவரை, 44 பேர் நாக் அவுட் ஆகியுள்ளனர். அவர்களில் 12 பேர் முதல் சுற்றிலேயே தாக்குப்பிடிக்காமல் சுருண்டு விழுந்துள்ளனர். டைசன் 2005க்கு பின் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஜேக் பால், யூடியுப் சமூக வலைதளத்தில் புகழ் பெற்றவர். அவர் 9 போட்டிகளில் மோதி 8இல் அபார வெற்றிகளை பெற்றவர். ஆனால் எதற்காக 58 வயதான மைக் டைசன் 27 வயதான ஜேக் பாலை எதிர் கொண்டார்? எதற்காக இந்த போட்டி நடை பெற்றது? ஏன் வயதை கணக்கிடாமல் போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டது? என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.