அரசின் சாதனையாக காட்டப் படும் சார்தாம் நெடுஞ்சாலை யின் பகுதியாகிய ரயில்பாதை சுரங்கம் நவம்பர் 11ஆம் தேதி இடிந்து 41 தொழிலாளிகள் 12 நாட்களாக சிக்கி யிருக்கின்றனர். சரியாக திட்ட மிடாமல் மீட்புப் பணிகளில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரி கிறது. இதை ஒரு தனித்த நிகழ்வாக பார்க்க இயலாது. இதற்கு முன் இந்தப் பகுதியில் கட்டப்பட்ட தபோவன்- விஷ்ணுகார் நீர்மின் நிலையம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டது. ஜோஷிமத் நகரில் பெரும் பாலான கட்டிடங்கள் பூமிக்குள் புதைந்தன. எனவே அரசுகள் இமா லயப் பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
1. இமயமலைத் தொடர் மிகவும் இள மையானது. எனவே அவை புவியியல் ரீதியாக பலவீனமானவை.
2. இந்தப் பகுதியில் சுற்றுலாவிற்காக வும் அணைகள் கட்டுவதற்காகவும் ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. தவறான சாலை அமைக்கும் முறைகள், சரிவு களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழம்வெட்டுதல், குகைகள், சாலைகள் அமைப்ப தற்காக தடை செய்யப்பட்ட வெடிப் பொருட்களை பயன்படுத்துதல், கட்டுமான இடிபாடுகளை நதி களில் கொட்டுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது போன்ற தவறுகளை, முதன்மைக் கல்வி நிலையங்கள் மற்றும் சிறப்பு தேசிய ஆய்வு சாலைகளை சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டி யுள்ளார்கள்.
3.இப்படிப்பட்ட எதிர்ப்புகளை தவிர்ப்பதற்காக அரசு இத்திட்டங் களை பல்வேறு சிறு சிறு திட்டங் களாக பிரித்துக் காட்டுகிறது. விபத்துகளை ஆய்வு செய் வதற்காக அமைக்கப்படும் குழுக்களி லுள்ள நிபுணர்கள் நிலைமையை ஒட்டுமொத்தமாக பார்க்காமல் தத்தம் துறை சார்ந்த விசயங்களை மட்டுமே தெரிவிக்கின்றனர். 4.இந்தப் பகுதிக்கென கட்டுமான நிர்ணயிப்பு விதிகள் ஏதாவது உண்டா என்று எவருக்கும் தெரியாது. ஐரோப்பாவில் உள்ளது போல ஏதா வது சுயேச்சையான அமைப்பு கட்டு மானங்களை கண்காணிக்கிறதா? திட்டங்களை வடிவமைத்து செயல் படுத்துவதற்கு முன் ஏதாவது முறை யான ஆய்வுகள் நடத்தப்படு கின்றனவா? அரசாங்கம் என்ன சொல்லி இந்த திட்டங்களை நியாயப்படுத்துகிறது
விரைவுச் சாலைகள் தேவையா?
புனித யாத்திரைகளை ஏராள மானவர்கள் மேற்கொள்கிறார்கள். சீனாவுடனான எல்லைக்கு தள வாடங்களை எடுத்துச் செல்ல வேண்டும். யாத்திரீகர்களைப் பொறுத்த வரை, தூய்மையான தலங்களின் புனிதத் தன்மை, அதனை கடினமான வழியில் அடைவதிலேயே உள்ளது. சுற்றுலாவாசிகளைப் பொறுத்தவரை இயற்கைக் காட்சி களை மெதுவாக ரசிப்பதுதான் விருப்பமாக இருக்கும். ஏன் விரைவு சாலைகள் தேவை? புனித சுற்று லாக்களை வணிக ரீதியான பார்வை யில் பார்ப்பதுவே இத்தகைய திட்டங்களின் பின்னணி. இதனால் அந்தப் பகுதி வாழ்வோ ரின் பொருளாதாரம், பிழைப்பு, சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை எல்லாமே பாழ்படுகின்றன. வழி யிலுள்ள நகரங்களெல்லாம் மக்கள் நெருக்கம் அதிகமாகி ஜோஷிமத் கட்டிடங்கள் புதைதல் போன்ற நிகழ்வு கள் ஏற்படுகின்றன. நீரோடைகள் பாதிக்கப்பட்டு கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. முக்கிய மலை வாசஸ்தலங்களான சிம்லா, மணாலி, முஸோரியின் நிலை இதுதான். ஐரோ ப்பாவில் பல சுற்றுலா தலங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டு சுற்றுலா வருபவர்களை திருப்பி அனுப்பு கிறார்கள். மலைவாழ் மக்கள் வளர்ச்சியை யும் மேம்பட்ட வசதிகளையும் வரு மானம் ஈட்டுவதையும் விரும்பு கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் மாற்று வழி இல்லையா? பர வலாக்கப்பட்ட தலங்கள், மேம்பட்ட தங்கும் இல்லங்கள், ஒரு மையத்தி லிருந்து விரிந்து செல்லும் பாதுகாப்பா னதும் சீரானதுமான போக்குவரத்து ஆகியவற்றை அமைத்து சுற்றுலா வாசிகள் உள்ளூர்ச் சூழலிலும் கலாச் சாரத்திலும் வாழ்ந்து ரசிப்பதை உறுதி செய்யலாம். சுற்றுலா செல்வோர் வழி யிலுள்ள இயற்கைக் காட்சிகளை ரசிக்காமல் குகைகளின் வழியே விரைந்து செல்ல வேண்டுமா? சற்று அதிக நேரம் பிடித்தாலும் அது தானே சிறப்பு?
இன்னொரு ரயில்பாதை
இந்த நெடுஞ்சாலையின் சாதக பாதகங்களை விவாதித்துக் கொண்டி ருக்கும்போதே ரிஷிகேஷையும் டேராடூனையும் இணைக்கும் ரயில்பாதை ஒன்று கட்டப்படுகிறது. 328 கிமீ நீளமுள்ள இந்தப் பாதையில் 21 ரயில் நிலையங்கள், 59 பாலங்கள், மொத்தத்தில் 279கிமீ நீளம் கொண்ட 61 சுரங்கங்கள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடு ஏதுமில்லாத இந்த அதி கட்டு மானங்களை ‘மலைக் கடவுள்கள்’ தாங்குவார்களா? இந்த நெடுஞ்சாலை களும் ரயில் பாதைகளும் கொண்டு வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா வாசிகள், யாத்திரீகர்களினால் ஏற்படும் அழுத்தத்தை மலை நகரங்களும் மலையும் தாங்குமா? - ரகு பீப்பிள்ஸ் டெமாக்ரஸி (நவம்பர் 13-19)கட்டுரையில்