சென்னை, செப். 7- சென்னையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓடிஏ)-யில் சனிக்கிழமை யன்று (செப்.7) நடைபெற்ற கண்கவர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி யில்,39 பெண் அதிகாரிகள் உட்பட 258 அதிகாரிகள் இந்திய ராணு வத்தின் பல்வேறு பிரிவுகளில் இணை ந்தனர். பயிற்சி அகாடமியின் புகழ்மிக்க பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதா னத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி முக்கிய விருந்தினராக பங்கேற்று, அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட ஓராண்டு கால கடுமை யான பயிற்சியின் நிறைவாக இவர்கள் ராணுவத்தில் அதிகாரிகளாக இணை கின்றனர். நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து பெண் அதிகாரிகள் உட்பட 10 பேர் தங்கள் பயிற்சியை வெற்றிகர மாக முடித்தனர். அவர்கள் பிற நாடுகளு டனான இந்தியாவின் நடப்புறவை பிரதிபலிக்கின்றனர். மேலும், இந்திய ராணுவத்தின் தளராத நம்பிக்கை கொண்ட எதிர்காலத் தலைவர்களாக பரிமளித்துள்ளனர். அதிகாரிகள் அணிவகுப்பு, தற்காப்பு இசையின் பின்புலத்துடன், சிறப்பான ஒத்திசைவுடன் நடைபெற் றது. அவர்களது கம்பீரமான இந்த அணி வகுப்பு பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தது. சென்னை அதிகாரி கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்றுனர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு இது பெருமை மிக்க தருணங்களில் ஒன்றாக அமைந்தது. பயிற்சியில் மிக சிறப்பாக செயல்பட்ட சாம்ரத் சிங்கிற்கு சிறப்பு வாள், சிம்ரன் சிங் ரதிக்கு தங்கப் பதக்கம், தனிஷ்கா தாமோதரனுக்கு வெள்ளிப் பதக்கம், தேவேஷ் சந்திர ஜோஷிக்கு வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி வழங்கினார். கம்பீரமான இந்த அணி வகுப்பைத் தொடர்ந்து, புதிய அதிகாரிகள் சீருடை யில் பெற்றோர், பாதுகாவலர் உள்ளி ட்டோர் நட்சத்திரம் பொறிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இளம் வீரர்கள் தங்கள் தோள்களில் மின்னும் சின்னங் களுடன், இந்திய அரசியலமைப்பின் மீதான தங்கள் பற்றுறுதி குறித்து உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பயிற்சி நிறைவு பெற்ற இளம் வீரர்களுடன் மகிழ்ச்சி ததும்பிய அவர்களது பெற்றோர், சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.