கிரேக்கத்தில் ரோமன் படையெடுப்பிற்கு பிறகு கணிதம் வளர்ச்சி காணவில்லை. அங்கே பெரும் மத கோட்பாட்டாளர் களால் கல்வியும், அறிவியலும். வளர்ச்சியும் சிதை வுற்றது. அங்கே அப்படியென்றால் சீனாவில் கணி தம் தன் வளர்ச்சியை கை நீட்டி பிடித்துக்கொண்டது. கி.மு இரண்டாயிரம்களில் சீனர்கள் வெண் கல வார்ப்பிலும், பட்டுநூல் நூற்பதிலும், எழுத்துக் கலையிலும் தலைசிறந்து இருந்தனர். இதற்கான வடிவங்கள் நமக்கு வெகுவாக கிடைத்திருக்கின்றன. சீனர்கள் நில நடுக்கத்தை உணரத்தும் கருவி யை அப்போதே வடிவமைத்திருந்தனர். மிக முக்கி யமா அவர்கள் கண்டுபிடித்தது திசை காட்டும் கருவி. மத்திய சீனாவில் உள்ளது கோபிப் பாலை வனம். பக்கத்தில் இருக்கும் பொருளைக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மறைத்திடும் மேக மூட்டத்தை கொண்டிருக்கும். இதிலும் கூட படை வீரர்களை அழைத்துச்செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் அந்த திசை காட்டும் கருவி. இந்த திசை காட்டும் கருவியை தான் இன்றைக்கும் நாம் பயன்படுத்து கிறோம். எது என்று தெரிகிறதா?.
ஆம், அதே தான் எப்போதும் வடக்கு திசையை காட்டக்கூடிய காந்த விசை திசை காட்டி. இந்த கண்டுபிடிப்புக்கு பிறகுதான் நட்சத்திரங்களை பார்த்து கப்பல்களை ஓட்டியவர்கள் நிம்மதியாக நட்சத்திரம் இருந்தா லும் இல்லாவிட்டாலும் கப்பல்களை சரியான திசைகளில் ஓட்டிச் சென்றனர். இங்கேயும் கூட தொடர் போர்களினால் சீனா பல துண்டுகளாக இருந்தன. இதனால் பெரிய கணித வளர்ச்சி இல்லை என்றே சொல்லலாம். இவர்களுக்கு வடிவியல் குறித்த பெரிய புரிதல் இருந்தது போல தெரியவில்லை. ஆனால் இயற் கணிதத்திலும், எண்ணியலிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை செய்திருந்தனர் என்றால் அது மிகை இல்லை. தசம எண்மான முறையை அறிந்திருந்தவர் கள். 453.52 என்ற என்னை சீன எண் முறையில் 4 நூறுகள், 5 பத்துகள், 3ஒன்றுகள், பத்தில் 5, நூறில் 2 என்று எழுதியுள்ளனர். இந்த எண் முறை ஷாங் அரச வம்சத்தின் பிற்காலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதாவது கி.மு. 1766 -1122க்கும் இடைப்பட்ட காலம். தசம எண்முறை போன்றே நிலையான எண்மா முறையும் சீனாவில் தோன்றியது. நாம் தற்போது பயன்படுத்தும் நிலையான எண்மாமுறையை நாம் புரிந்து கொள்வோமா? 1535 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். இந்த எண்ணில் 2 இடத்தில் 5 என்ற ஒரே எண் வருகிறது. ஆனால் இரண்டும் வெவ்வேறு இடங்களில் உள்ளன. இப்படி இருப்பதை நாம் எவ்வாறு உணர் கிறோம். வலது ஓரத்தில் இருக்கும் 5க்கு மதிப்பு என்பது 5 ஒன்றுகள் ஒன்றுக்கு அடுத்து உள்ள 5க்கு மதிப்பு என்பது 5 நூறுகள் இதனை அறிந்து கொள்வதந்கு கம்பி எண் களை சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் இதற்காக எண்ணிடும் சட்டத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த 2 முறை யை அவர்கள் எவ் வாறு பயன்படுத் தினார்கள் என் பதை நாம் முழு மையாக அறிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் கேட்பது தெரிகிறது. இதற்கு முன் கண்டு பிடிப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை சொல்லிவந்தீங்க. இங்கே நீங்கள் அப்படி ஒரு குறிப்பிட்ட நபரை சொல்லவில்லையே என்று கேட்கிறீர்கள் தானே. அதற்கு காரணம் இருக்கிறது. சீனாவை பேரரசர் ஷீஹுவாங்டி கி.மு221ம் ஆண்டு ஒருங்கிணைத்தார். இதற்காக பல சட் டங்களை இயற்றினார். எப்போதும் சுயநலமாகவே தனிமனிதன் யோசிப்பான் என்பதால் பொது நலத் திற்காக கடுமையான சட்டத்திட்டத்தை இயற்றி னான். பல்வேறு எழுத்துமுறைகள், கணக்கீடு முறைகளை ஒன்றிணைத்து ஒரே முறையாக மாற்றுவதற்காக கடுமையான சட்டங்களை இயற்றினார். இதனால் ஏற்றுக்கொண்ட கணித முறை தவிர மற்றவற்றை எரித்துவிட உத்தரவிட் டார் இதனால் பல கணித செயல்பாடுகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. ஒற்றை நாடு, ஒற்றை மொழி, ஒற்றை கணிதம் என்பது பல வகையான அறிவுகளையும், வளர்ச்சி களையும் தடை செய்துள்ளது. தடை செய்யும் என்பதை நாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. பின்னாளில் கணித அறிஞர்கள், விஞ்ஞானி கள் தங்கள் ஞாபகத்தில் இருந்த கணித செயல்பாடு களை மீண்டும் உருவாக்கம் செய்துள்ளனர். அது குறித்து தொடர்ந்து பேசலாம்.