இமாச்சலப் பிரதேசத்தில் அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தரக் கொள்கை வகுக்க வேண்டும். அதை உடனடியாக மாநில அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு சார்பில் அவுட்சோர்ஸ் ஊழியர்கள் சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, தொழிற்சங்கத் தலைவர்கள், மாநில முதல்வர் ஸ்ரீ ஜெய்ராம் தாக்கூரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் அவுட்சோர்சிங் கொள்கையை வகுக்க விரைவில் வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.