tamilnadu

குசும்பு! - கோ.பால.முருகு

அந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில்  உடற்கல்வி இயக்குநராகப் பணி யாற்றி வந்தார் விஜயன். அவரின்  கடின உழைப்பாலும், பணி மீது கொண்ட ஆர்வத்தாலும், உடற்பயிற்சிக்கான அனைத்து பொருள்களையும் அதற்கான நிதியைப் பயன்படுத்தி அவர் வாங்கிக் குவித்திருந்தார். கூடைப் பந்து.ஷட்டில்  பேட்மிண்டன் இவைகளில் அவருக்கி ருந்த திறமையால் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகளைப் பெற்று  வந்தார்.அதனால் மாணவர்கள் அவர்  மேல் அளவு கடந்த அன்பும் மரியாதை யும் கொண்டிருந்தனர். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் இவர் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள் ளிக்குச் சொந்தமான குடியிருப்பில் குடும்பத்தோடு தங்கியிருந்தார். அதனால் இவரை விடுதிக் காப்பாளராகவும் முதல்  வர் நியமித்திருந்தார். மாலை வீட்டிற்கு  வந்து குளித்துவிட்டு,உடனே விடுதிக்குப்  புறப்பட்டுவிடுவார். பிறகு வீட்டிற்கு வந்து  இரவு உணவை முடித்துக் கொண்டு விடு திக்குச் சென்று மாணவர்கள் அவரவர் அறைக்குப் படுக்கச் செல்வதுவரை அங்  கேயே இருப்பார்.சில நாள்களில் இரவு  பன்னிரெண்டு மணிக்குச் சென்று பார்வை யிடுவதும் உண்டு. ஒரு நாள் மாலை விடுதிக்குச் சென்ற போது மாணவர்களில் சிலர்”சார்…விடுதி இதை விட்டால் பள்ளி என்று போர்  அடிக்கிறது.எங்கேயாவது பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லுங்கள்” என்றனர். சரி… பக்கத்தில் என்றால் எங்கே செல்வது? என்று கேட்டார். சிலர் சிதம்பரம் பிச்சா வரம் என்று சொல்ல, சிலர் கங்கைகொண்ட  சோழபுரம் என்றனர். இரண்டையும் சீர்தூக்  கிப் பார்த்ததில் கங்கைகொண்ட சோழ புரம் செல்வதென்று தீமானித்தனர். விஜயனும் “சரி…நாளைக்கு முதல்வரி டம் சொல்லி அனுமதி கேட்கிறேன்.அவர் அனுமதி அளித்தால் போகலாம்” என்று சொன்னார்.அப்போதே மாணவர்கள் மகிழ்ச்சியில் அனைவரும் ஓ…வென்று குரல் எழுப்பினர். மறுநாள் முதல்வரிடம் சொல்ல “அதெற்கென்ன விஜி, நீங்க பொறுப்பான வர். அழைத்துப் போய் வாருங்கள்” என்றார்

மறுநாள் ஐம்பது மாணவிகள் ஐம்பது மாணவர்களோடு அரசுப் பேருந்தில் ஏறி  கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயிலின் உள்ளே சென்று பெரிய லிங்  கத்தைப் பார்த்துவிட்டு, வெளியே உள் பிர காரத்தைச் சுற்றி வந்தனர். புகழ் பெற்ற சிங்கமுகக் கிணற்றின் உள்ளே உள்ள படிகளில் இறங்கிப் பார்த்தனர். வெளிப் பிரகாரத்தில் சுற்றிப் பார்த்துக்  கொண்டிருந்தபோது. நளினி, தேவகி, மணி, சேகர் ஆகிய நால்வரும் அலறி யடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவர்  களைத் தொடர்ந்து தேனீக்கள் ஆக்ரோஷ மாகத் துரத்தித் துரத்திக் கொட்டிக் கொண்டே வந்தன.இவர்கள் நால்வரும்  கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டி ருந்தனர். விஜயனும் அவர்கள் பின்னே ஓடி னார். அங்கு கடை வைத்திருந்த ஒருவர்  சம்பவத்தைப் பார்த்துவிட்டு “சார்…அவர்  களை எதிரே இருக்கும் குளத்தில் இறங்கி, தண்ணீரில் மூழ்கச் சொல்லுங்கள் துரத்து வதை நிறுத்திவிடும்” என்றார். விஜயனும்  சத்தமாக அவர்களிடம் சொல்ல நால்வரும்  குளத்தில் இறங்கித் தண்ணீரில் மூழ்கிக் கொண்டனர். துரத்தி வந்த தேனீக்கள் திரும்பிச் சென்று விட்டன. அந்தக் கடைக்காரர் மீண்டும் சொன்  னார் ”சார்…..துரத்தி வந்தது சாதாரண தேன்பூச்சி இல்லை.அது கதண்டு என்ற கொடிய விஷமுள்ள வண்டு உடனடியாக மருத்துவரிடம் காட்டுங்கள். நல்ல வேளையாக உடலில் இரண்டு மூன்று இடங்களில் தான் கொட்டியிருக்கிறது. அந்தப் பையனுக்குத் தான் அதிக இடங்களில் கொட்டியிருக்கிறது” என்றார்.

விஜயன் பதறிப்போய் வேகமாக அனைத்து மாணவர்களையும் ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டு நால்வரையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவரிடம் சென்றார்.நல்ல வேளையாகக் கூட்டம் அதிகமில்லை. மருத்துவர் பார்த்துவிட்டு உடனே நால்வ ருக்கும் ஊசிபோட்டு விட்டு சில மாத்தி ரைகளை அவரே தந்தார். தந்தவர் நீங்கள்  யார்?எதற்காக வந்தீர்கள்? எப்படி இந்த சம்பவம் நடந்தது?” என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார். இதுவரை, கார ணத்தைத் தெரிந்துகொள்ளாத விஜிக்கு அது தேவையானதாக இருந்தது. அந்த நால்வரில் நளினி மட்டும் நடந்த  செய்தியைச் சொன்னாள்” சார் உள் பிர காரத்தைச் சுற்றி வரும்போது கோபு ரத்தின் உள்பகுதியில் பெரிய தேன்கூடு  இருந்தது.அப்போது, நாங்கள் எதிர் பார்க்காத நேரத்தில் ஒரு கல்லை எடுத்து அந்தக் கூட்டில் அடித்துவிட்டான்.அவ்வ ளவுதான் ஜெட் வேகத்தில் கல்லெறிந்த திசை நோக்கி எங்கள் நால்வரையும் தாக்க  ஆரம்பித்து விட்டது”என்று சொன்னாள். “பாத்தீங்களா.. சார், இந்தப் பசங்களை  நம்பி, நீங்க ஒருத்தரே நூறு பேரை அழைச்சிகிட்டு வந்திருக்கீங்க….இவன்க பண்ணுன குசும்பினால பெரிய ஆபத்தே நிகழ்ந்து விட்டது.நல்ல வேளையாக அதிக இடத்தில் கொட்டாததால் தப்பித் துக் கொண்டார்கள் என்றார். ”எவ்வளவு சார்..ஃபீஸ்?” என்று விஜயன் கேட்க ”வேண்டாம் சார்…நீங்க மாணவர்களின் மகிழ்ச்சிக்காக இவ்வளவு செய்யும் போது என்னுடைய பங்கும் இதில் இருக்கட்டும்” என்று சொல்லி பணம் வாங்க மறுத்துவிட்டார்.