tamilnadu

img

சிஆர்பிஎப்-க்கு எதிராக மணிப்பூரில் பெண்கள் போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 10 அன்று சிஆர்பிஎப் ராணுவம் குக்கி பழங்குடி மக் களை குறிவைத்து நடத்திய தாக்குத லில் 11 பேர் உயிரிழந் தனர். 5க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்ப வத்தை கண்டித்தும், சிஆர்பிஎப் ராணு வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யும் ஜிரிபாம், காங்போக்பி மற்றும் தெங் னௌபால் ஆகிய 3 மாவட்டங்களில் குக்கி பழங்குடி பெண்கள் பேரணியுடன் போராட்டம் நடத்தினர். மேலும் சிஆர்பி எப் ராணுவத்தின் தாக்குதலால் உயிரி ழந்தவர்கள் 11 பேர் வன்முறையாளர் கள் இல்லை என்றும், அவர்கள் அனை வரும் குக்கி பழங்குடி மக்களுக்கான தன்னார்வலர்கள் என்பதால் சிஆர்பிஎப் ராணுவம் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமைச் சகம் மற்றும் சீமிடாங் துணை ஆணைய கத்துக்கு கடிதம் மூலம் மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.