மகளிர் உரிமைத் தொகை இன்று முதல் விண்ணப்பம்
சென்னை, ஜூலை 6 - மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக திங்கட்கிழமை (ஜூலை 7) முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படு கிறது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங் களை வீடு வீடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 15இல் உங்களுடன் முதலமைச்சர் திட்டத்தை சிதம்ப ரம் நகராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னார்வ லர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்கவுள்ளது. முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறை களைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனை பேணும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் அளிக்கலாம். இந்தத் திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளது.