tamilnadu

img

காவல்துறை சார்பில் மகளிர் தினவிழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 28-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்து காவலர்களும் ஒன்றுகூடி காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதிமத பேதமின்றி  பெண்களின் வீரத்தை போற்றுகிற வகையில் மகளிர் தினத்தை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம்  காவல் துணை  கண்காணிப்பாளர்  முருகேசன் தலைமை ஏற்றுப்பேசி னார். ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜசேகரன், இடையகோட்டை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, கன்னிவாடி காவல் ஆய்வாளர் வெள்ளையப்பன் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் இடை யகோட்டை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.  இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி  சார்பு ஆய்வாளர் சூரிய கலா, அம்பிளிக்கை சார்பு ஆய்வாளர்கள் சவடமுத்து, திரு மலைசாமி, ரெட்டியார்சத்திரம் சார்பு ஆய்வாளர் சரவ ணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் காவல்  துறையில் மகளிர்களின் பங்கு பற்றி பேசப்பட்டது.

;