திருவில்லிபுத்தூர், மார்ச் 13- விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் ஜேசிஐ கீரின்சிட்டி சார்பில் டிவிஎஸ்என்எஸ் பள்ளியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜேசிஐ கீரின்சிட்டி தலைவர் அமுதா தலைமை வகித்தார். டிவிஎஸ் என்எஸ் பள்ளி தாளாளர் வரவேற்றார். மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரேணுகா தேவி சிறப்புரையாற்றி, குழந்தைகளுக்கு பரிசுகளையும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தார். குழந்தைகள், ஆசிரியர்கள் இணைந்து நடனம், கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய செய லர் வேதா செந்தில், பொருளாளர் ஈஸ்வரி செய்திருந்தனர்.