குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தொழிலாளர் நலக் கோரிக்கை களை முன்வைத்து தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சார்பில் நடை பயண பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்திற்கு மதுரை மாநகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நடைபயணத்தில் பங்கேற்ற மாண விகள், பெண் ஆட்டோ தொழிலாளர் கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். நடைபயணத்தை பார்வையிட்ட கட்டுமானத்தொழிலா ளர்கள் மோடி அரசால் தாங்கள் பட்ட வேதனையைத் தெரிவித்தனர். நடைபயண பிரச்சாரக்குழுவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த 18 வயதான பிருந்தா என்பவர் பங்கேற்றார். இவர் தேனி மாவட்டத்தி லுள்ள நாடார் சரஸ்வதி கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படிக்கிறார். இந்த பயணம் குறித்து அவர் கூறு கையில், ஜிஎஸ்டி போன்ற பிரச்சனை கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு குறித்துப் பேசுவதற்கு பெண்கள் மத்தி யில் வரவேற்பு உள்ளது. பிரதமர் மோடி யைப் பற்றி விமர்சித்தால், நன்றாகப் பேசுங்கள் எனக் கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.
நடைபயணத்தை பார்வையிட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கூறுகை யில், “எல்லோருடைய வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் மோடி. இதுவரை ஒரு பைசா வரவில்லை. கேஸ் மானியத்தை வங்கியில் போட்டார்கள். இப்போது அதை எங்கே போடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்றார் மோடி. இப்போது கட்டுமானத் தொழிலா ளர்களுக்கே வேலை இல்லை. பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்கள் கட்டிய வீடுகளும் விற்பனையாகவில்லை” என்று கவலையுடன் தெரிவித்தனர். காக்கிச் சீருடை அணிந்து பெண் ஆட்டோ தொழிலாளர்கள் நடைபய ணத்தில் பங்கேற்றனர். அவர்களில் ஒரு வரான மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்த கே.சித்ராதேவி(43) கூறுகை யில், “ஆட்டோ தொழிலில் நாங்கள் படும் கஷ்டங்களை சிஐடியுவினரிடம்தான் சொல்வோம். சிஐடியு, அரசிடம் சொல்கி றது.
எங்களுக்காக குரல் கொடுக்கிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நக ரைச் சேர்ந்தவர் ஆதிசிவன்(25), மதுரை புதூரைச் சேர்ந்தவர் அமரன் (23). இவர்கள் கூறுகையில், படித்து முடித்தால் அடுத்து வேலை தானே. வேலைக்கா கத்தானே சிஐடியு போராடுகிறது. அதனால் வந்துள்ளோம். குடியிருக்க நல்ல வீடு வேண்டும். வேலை வேண்டும் அவ்வளவு தான். சென்னையில் திருநம்பிகள் 50 பேர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். மதுரையில் இதுவரை ஒருவருக்குக் கூட கிடைக்கவில்லை. சிஐடியு முயற்சித்தால் எங்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும். அந்த நம்பிக்கையில்தான் இந்தப் பயணத்தில் நாங்கள் பங்கேற்றுள்ளோம் என்றனர். மதுரை மஹபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா (23). பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். மதுரை காமரா ஜர்புரம் முனிச்சாலையைச் சேர்ந்தவர் வாசுகி (21). எம்.எஸ்.சி, கணிதம் முடித்துள் ளார். இருவரும் வாலிபர் சங்கத்தில் இருப்பதாகக் கூறினர். நடைபயணம் குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கேஸ் விலை உயர்வால் அனைத்துக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பே இல்லை. எல்ஐசி, வங்கி, ரயில்வே துறைகளை விற்று வருகிறார்கள். இந்த நிலை இருந்தால் எங்களைப் போன்றவர்களின் எதிர் காலம் கேள்விக்குறிதானே... அதை மாற்றுவதற்காக நடைபயணத்தில் பங்கேற்றுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிப்போம் என்றனர்.
- தொகுப்பு: ஜெ.பொன்மாறன்