tamilnadu

img

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறுக! ஐந்து மாவட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம்

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறுக! ஐந்து மாவட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம் 

மாணவர்களை காவல்துறையினர் தரக்குறைவாக பேசி தள்ளுமுள்ளு

ஜிசி வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற யுஜிசியின் புதிய அறிவிப்புக்கு எதிராகவும், மாநில உரிமைகளை பாதுகாத்திடவும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாணவர்கள், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதை எதிர்த்து மாணவர்கள், நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். ஆனால் ஏன் மரியாதை குறைவாக நடத்துகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது காவல்துறையைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தரக்குறைவாக பேசினர்.  கைது செய்த மாணவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தபோது, சிபிஎம் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட் கொடுக்கச் சென்றபோது, அதனை அனுமதிக்காமல் அலைக்கழித்தனர்.  இது சம்பந்தமாக மாணவ சங்கத் தலைவர்கள் பேசும்போது, ஜனநாயக முறையில் போராட்டத்தை நடத்தினாலும் கும்பகோணம் காவல்துறை திசை திருப்பி வன்முறைச் செயலுக்கு தூண்டுதல் செய்ய முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சந்துரு தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் மோகன் கண்டன உரையாற்றினார். தஞ்சை மாவட்டத் தலைவர் அர்ஜுனன், கடலூர் மாவட்டத் தலைவர் பூபதி, மாவட்டச் செயலாளர்கள் திருவாரூர் சுகதேவ், மயிலாடுதுறை மணிபாரதி, நாகை முகேஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க, மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.