சென்னை. ஏப்,13 மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிப்ரவரி 15-ம் தேதி முதல் 19 ம்தேதி வரை காதுகேளாதவர்களுக்கான 8-வது ஜுனியர் தேசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 25-வது சீனியர் தேசிய விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றது. ஜுனியர் மற்றும் சீனியர் தேசிய விளையாட்டுப் போட்டி களில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டு தல், உயரம் தாண்டுதல், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த 150 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு பிரிவு போட்டிகளில் 42-வீரர்-வீராங்கனைகள் 51- தங்கம் 26- வெள்ளி மற்றும் 18- வெண்கலம் என மொத்தம் 95- பதக்கங் களை வென்று சாதனை படைத்தனர். இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பி யன் ஷிப் தரவரிசையில் தமிழ்நாடு 2-ம் இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற அணி வீரர்கள் பலர் மற்றும் நிர்வாகி கள் தலைமைச் செயலகத்தில் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பதக்கங் கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.