tamilnadu

12 சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட தாமதம் ஏன்?: உயர் நீதிமன்றம்

சென்னை,பிப்.18- நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், அனைத்து மாநில உயர்நீதிமன்றங் களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன. அந்தவகையில், 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இந்த  வழக்கில் உயர்நீதிமன்றம் உதவும் நபராக  மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, “தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.92  விழுக்காடு சதுப்பு நிலங்கள் உள்ளன, சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பு வெளி யிட்டால் மட்டுமே அந்த பகுதிகளில் கட்டுப் பாடுகளை அமல்படுத்த முடியும். தற்போது பள்ளிக்கரணை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழுவேலி ஆகியன சதுப்பு  நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 12 இடங்களை சதுப்பு நிலங்களாக அறி விக்கும் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. சதுப்பு நில பாதுகாப்புக்கான ராம்சிர்  சாசனத்தின் கீழ், தமிழ்நாட்டில் கோடியக் கரை மட்டும் சதுப்பு நிலமாக அறிவிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார். தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, சட்டவிதிகளின் கீழ் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்து அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட ஏன் தாமதம் ஏற்பட்டது? என்பது குறித்தும் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.