tamilnadu

img

இறுதி மூச்சு வரை கட்சிப்பணி செய்தவர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்

சென்னை,மே 2-  இறுதி மூச்சு வரை கட்சி ஸ்தாபன அரசியல் பணியை செய்தவர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் என்று அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளரும், தமிழகம் அறிந்த மார்க்சிய ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் (வயது 65) மே 1 ஞாயிறு இரவு 10.45 மணிக்கு மதுரையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.  17.5.1957 அன்று பிறந்த தோழர் வெங்கட்டராமன், ம.ரெட்டியபட்டியில் பள்ளிப் படிப்பையும், கோவில்பட்டியில் பி.யூ.சி., தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி., மண்ணியல் பட்டப்படிப்பையும் படித்தார். இடதுசாரி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு மாணவப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். 

1981-82 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அருப்புக் கோட்டை தாலுகா செயலாளராக செயல்பட்ட அவர், பின்னர் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக பல்லாண்டு காலம் செயலாற்றி விவசாயிகளின் நல னுக்காக ஏராளமான போராட்டங்களில் முன்னின்றவர். தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், பி.சீனிவாசன் போன்ற கம்யூனிஸ்ட் முன்னோடிகளுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் விருதுநகர் மாவட்டச் செய லாளராக பொறுப்பேற்று 2001ஆம்  ஆண்டு வரை திறம்பட செயலாற்றி யவர். விருதுநகர் மாவட்ட உழைப்பாளி  மக்களிடம் வீடுவீடாக நிதி திரட்டுவதி லும், அந்த நிதியைக் கொண்டே கட்சி யின் இயக்கங்களை நடத்துவதிலும் முன்னுதாரணமாக செயல்பட்டவர்.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர் நலன் காக்கவும், விவசாயிகள், நெசவுத்தொழிலாளர் நலன் காக்கவும் எண்ணற்ற போராட்டங்களின் போராளி யாக விளங்கியவர். பெண்களின் பிரச்ச னைகளிலும், பெண்ணுரிமைக்கானநேரத்தில் அப்படியே சரிந்து விழுந்தார். திடீர் மாரடைப்பு தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனின் உயிரைப் பறித்து விட்டது. அந்த பேருந்து நிறுத்தத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலம் தகவல் அறிந்த தீக்கதிர் ஊழியர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்களும் பதைபதைப்புடன் சம்பவ  இடத்திற்கு விரைந்தனர். தங்களது உற்ற தோழரும் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவருமான தோழர் எம்.என்.எஸ். உயிரற்று வீழ்ந்து கிடந்த காட்சி ஒவ்வொருவரையும் நிலை குலையச் செய்தது. கதறித்  துடித்தார்கள். தலைவர்களுக்கும், மாநிலம் முழுவதும் உள்ள தோழர்களுக்கும் சில நொடிகளில் தகவல் பறந்தது. தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் ஆயிரம் ஆயிரம் தோழர்களும் பதறிப் போனார்கள். செய்வதறியாது திகைத்துப் போனார்கள். 65 வயதே ஆன, தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனின்  அதிர்ச்சிகரமான திடீர் மரணம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு தோழரையும்  உலுக்கியது.

தகவல் அறிந்து  தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமனின் மகன் சூர்யா, சகோதரர் செண்பகராஜ் உள்ளிட்ட உறவினர்கள் மதுரை வந்தடைந்தனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், மா.கணேசன், எஸ்.கே.பொன்னுத்தாய், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட  மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட தலைவர்களும் எஸ்.பி.ராஜேந்திரன், ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்ட தீக்கதிர் நிர்வாகிகளும் தோழர் எம்.என்.எஸ்.  வெங்கட்டராமன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து  அவரது உடலுடன் ஆம்புலன்ஸ் வாகனம் புறப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், தீக்கதிர் நாளிதழின் வெளியீட்டாளர் மற்றும் முதன்மை பொது மேலாளர் ஆகிய பொறுப்புகளை வகிக்கும் தனது உற்ற தோழரை இழந்து துடித்துப் போனது மாநில செயற்குழு. மே 2 அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கண்ணீரும் கம்பலையுமாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் தோழர்களும் ம.ரெட்டியபட்டிக்கு வரத் துவங்கினர்.

மாநில செயற்குழு பிரியாவிடை

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு  உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது,  க.கனகராஜ், என்.குணசேகரன், மதுக்கூர்ராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி,  ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், கே.பாலபாரதி, எஸ்.கண்ணன் ஆகியோர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உடலுக்கு செவ்வணக்கம் செலுத்தி இறுதி விடையளித்தனர். கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி,  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, கட்சியின் மூத்த தலைவரும், எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமனின் மாமாவும் ஆகிய எஸ்.ஏ.பெருமாள், மூத்த தலைவர் ஏ.லாசர், மாநில குழு உறுப்பினர்கள், பல்வேறு மாவட்டங் களின் செயலாளர்கள், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் அணி அணியாய் திரண்டு வந்து  தோழர் வெங்கட்டராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உவாசுகி, ஆர்.கருமலை யான்,  மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு அஞ்சலி

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உடலுக்கு தமிழக  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தி.ராமசாமி, வி.அழகிரிசாமி, மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம் ஆகியோர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

வைகோ இரங்கல்

மதிமுக பொது செயலாளர் வைகோ எம்.பி, திமுக வழக்கறி ஞர் அணித் தலைவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. செவ்வணக்க முழக்கங்கள், கண்ணீர் அஞ்சலி ஆகிய வற்றுக்கு இடையே தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ம.ரெட்டியபட்டி கிராமமே கண்ணீர் வடித்தது. சூரியன் மறைந்தான். தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் காற்று வெளியில் கலந்தார்.