tamilnadu

img

மிதிவண்டிப் பயணம் - கோவி.பால.முருகு

மார்கழி மாதம் வந்தாலே  ஏகா தசி நாளைத்  தெரிந்து கொண்டு அந்த நாளுக்காகக்  காத்திருப்பார்கள் அழகும் அவனுடைய நண்பர்களும்.அன்று இரவு முழுதும் கண் விழித்து இரவைக் கொண்டாடுவதற்கு  முன்பே திட்டமிடுவார்கள். திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மயி லாடுதுறை திரையரங்கிற்குச்  சென்று முதல் காட்சியும், இரண்டாம் காட்சியை யும் பார்ப்பது. ஊரில் இருக்கும்  ஐயனார் கோயில் ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்  சல் விளையாடுவது,மாரியம்மன் கோயில்  பிரகாரத்தில் ஓடிப் பிடித்து விளயாடுவது. விடியற்காலை நான்கு மணிக்கு   மாரி யம்மன் கோயில் குளத்தில் நீச்சலடிப்பது,  கடைசியாகப் பெருமாள் கோயிலுக்குச் சென்று  ஐயங்கார் கொடுக்கும் வெண் பொங்கலைச் சுவைப்பது என்று திட்ட மிட்டிருந்தனர்.

அதன்படியே மிதிவண்டியில் இரண்டு பேர் மூன்றுபேர் என்று மயிலாடுதுறை திரையரங்கிற்குச் சென்று இரண்டு காட்சி களையும் பார்த்து விட்டு ஊர் திரும்பி யவர்கள்  அடுத்தடுத்து திட்டமிட்டபடியே அனைத்தையும் மகிழ்ச்சியோடு செய்து முடித்து அவரவர் வீட்டிற்குச் சென்றனர். வீட்டில் இரவு முழுதும் கண் விழித்து தாயக்கட்டை, பல்லாங்குழி, பரமபதம் விளையாடிக் கொண்டிருந்த இளம் பெண்களும் முதியவர்களும் தாங்கள் வாங்கியும் பிற வீடுகளில் பண்டமாற்று முறைப்படி காய் கறி வகைகளை மாற்றிக் கொண்டும்,இருபத்தோரு காய்கறிகளில் குழம்பு, கூட்டு,பொரியல்,வடை,பாயசம் என்று தயாரித்து காலை ஒன்பது மணிக்  கெல்லாம் படையல் போட்டு சாப்பிடுவ தற்குக் தயார் படுத்தியிருந்தனர். அழகு வயிறு முட்டச் சாப்பிட்டான். சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே கண்  கள் செருக ஆரம்பித்தது.’சரி போய் நன்றாக ஒரு உறக்கம் போடுவோம்’ என்று  நினைத்தவனின் எண்ணத்தில் மண் விழுந்தது.அவனுடைய அப்பா”டேய்..அழகு சைக்கில எடுத்துகிட்டு பந்தநல்லூர்  போய் வைத்திலிங்கத்தப் பார்த்து இந்த கடு தாசியைக் கொடு.அவர் பணம் கொடுப்  பார். பத்திரமாக வாங்கிக் கால்சட்டையில்  வைத்துக் கொண்டு கீழே விழாதவாறு  பையில் ஒரு ஊக்கைப் போட்டுக்கொள்” என்றார்.தந்தையின் சொல்லைத் தட்டா தவன்.வேறு வழியின்றி மிதிவண்டியை எடுத்துக் கொண்டு ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பந்தநல்லூருக்கு வந்து வைத்திலிங்கத்திடம் கடிதத்தைக் கொடுத்துப் பணத்தை வாங்கிப் பத்திரப் படுத்திக் கொண்டான்.

திரும்பி மூன்று கிலோமீட்டர் தூரம் வந்திருப்பான்.அவனையும் அறியாமல் கண்கள் மூடிக்கொள்ள ஒரு நிமிட நேரம் உறங்கிவிட்டான்.அவ்வளவுதான். சாலையை ஒட்டி, பத்தடி பள்ளத்தில் இருக் கும் வயலில் சைக்கிளோடு வீழ்ந்தான். நல்ல வேளையாக நடுவதற்குத் தயாராக  உழுது வைத்திருந்த சேற்றில் வீழ்ந்த பிறகுதான் கண்விழுத்துக் கொண்டான்.மிதிவண்டி அவன் மேலே கிடந்தது.மிதி வண்டியின்  எதோ ஒரு பகுதி மார்பில்  குத்தி யதால்  வலித்தது. அப்போது அழகு விழுந்ததைப் பார்த்த  ஒருவர் ஓடோடி அருகே வந்தார்.”ஏன்டா தம்பி வந்துகிட்டு இருக்கும்போதே எப்படி  இவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழுந்தாய்?’’ இரவு தூங்காமல் இருந்த தையும். தன்னையும் அறியாமல் தூங்கி விட்டதையும் சொன்னான். “தம்பி..இப்படி சேற்றிலே விழுந்த தால் பலத்த அடி இல்லாமல் தப்பித்தாய். இதுவே காய்ந்த நிலமாக இருந்தால் உயி ருக்கே ஆபத்தாய் முடிந்திருக்குமே. அதை விடு.. வருகிற போகிற பேருந்தில் வீழ்ந்திருந்தால் என்னவாகும்?”அவரின் பேச்சைக் கேட்ட அழகுக்கு ஈரல் குலையே நடுங்க ஆரம்பித்தது. மேலிருந்து கைகொடுக்க மிதி வண்டியைத் தூக்கி எதிரே ஓடும் மண்ணி யாற்றில் மிதிவண்டியையும், ஆடை களையும் சேறுபோகச் சுத்தப் படுத்திக்  கொண்டு புறப்பட்டவன் பட்ட அனுப வத்தால் மிக மிக மெதுவாக எச்சரிக்கை யோடு ஓட்டி வீட்டிற்கு வந்தான். அதற்குள் ஆடை முழுதும் காய்ந்துவிட்டது. அழகுக்கு வயது இப்போது  எழுபது. இப்போதும் தன் பிள்ளைகளிடமும்,பேரப் பிள்ளைகளிடம் மட்டுமல்லாமல்  எல்லாரி டமும்  தனக்கு நேர்ந்த விபத்தைச் சொல்லி,  தூக்கக் கலக்கத்தில்  எந்த வண்டியாக இருந்தாலும் ஒட்டாதீர்கள். உறக்கம் வந்தால் ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தபின் ஓட்டுங்கள். நான் எதோ அன்றைக்குப் பிழைத்துக் கொண்டேன். எல்லாருக்கும் அப்படி நடக்குமென்பது நிச்சயமில்லை. விலை மதிக்க முடியாத உயிரை இப்படிப்பட்ட அலட்சியத்தால் இழக்கக் கூடாது” என்று சொல்லத் தவறுவதில்லை.