“டாணாக்காரன்” என்பதற்கு தமிழில் “காவல்காரன்” என்று பொருள், ஆனால் தமிழில் ஏற்கனவே காவல்காரன், போலீஸ்காரன், ரகசிய போலீஸ் போன்ற பெயர்களில் திரைப்படம் வந்திருப்பதால் இந்தப் படத்திற்கு சற்று மாறுதலாக இருக்கட்டுமே என்று டாணாக்காரன் என்று இந்தியும் தமிழும் கலந்த தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதாவது இந்தியில் டாணா வாலா என்பதுதான் தமிழில் டாணாக் காரன் என்றாகிறது. தலைப்பை போலவே இந்த படமும் காவல்துறையை பற்றிய ஒரு புதிய கோணத் தில் தன் பயணத்தை தொடங்குகிறது. காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் என்றாலே காவல் நிலையம், கண்டிப்பான ஆய்வாளர், சிரிப்பு மூட்டும் காவலா்கள் போன்ற காட்சிகளையே பார்த்து அலுத்துப் போன நமக்கு காவல்துறையின் பயிற்சி மையத்தை மையமாகக் கொண்ட இக்கதை ஒரு வித்தியாச மான பார்வையைத் தருகிறது. காவல்துறையினருக்கு மூளைச்சலவை எங்கு ஆரம்பிக்கிறது? அது அவா்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியிலேயே தொடங்கி விடுகிறது என்று கூறி கதையை நகர்த்துகிறார் இப்படத்தின் இயக்குனர் தமிழ்.
இவர் ஏற்கனவே ஜெய் பீம் படத்தில் காவல் ஆய்வாளராக நடித்து காக்கிச் சட்டையை முகர்ந்தவர் என்பதால் இந்த படத்தில் காக்கிச் சட்டைகளின் விறைப்பு, முறைப்பு மறைப்பு எல்லாவற்றையும் தோலுரிக்கிறார். திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவா்களை தேர்ந்தெடுத்து அவர்களை தங்களுக்கு தகுந்தாற்போல் பயன்படுத்திக் கொள்வதில் ஆங்கிலேயர்கள் கில்லாடிகள். இந்தியாவில் 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தில் இந்திய இளைஞர்களின் வீரத்தை பார்த்த ஆங்கிலேயர்கள், இந்திய இளைஞர் களை வைத்தே இந்தியாவை எதிர்ப்பது என்று முடிவு கட்டி இந்திய இளைஞர்களை கொண்டு ஒரு காவல்படையை அமைத்தனர். இந்த காவல்படைக்கு அளிக்கப்பட்ட பயிற்சி களுள் “கவாத்து” என்பதும் ஒன்று. கவாத்து என்றால், எதிரியை வெல்ல வேண்டும் என்ற சிந்தனையை தவிர வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்கக் கூடாது. அதா வது எதிரில் யார் இருக்கிறார் என்பதல்ல பிரச்சனை போட்டியில் நீ வெற்றி பெறுகிறாயா என்பதை மட்டும் பார் என்கிறது பயிற்சி. மகாபாரதத்தில் தனக்கு எதிராக கர்ணன் நிற்பதை பார்த்து தயங்கிய அர்ச்சுணனை, போர் என்று வந்துவிட்டால் உறவுகளை பாராதே, விடு அம்பை என்கிறார். இது புராணக்கதை. நமது காலத்திலும் கூட, பொதுக் கோரிக் கைகளுக்காக போராடும் அரசு ஊழியர்களை அடித்து விளாசுவதும் அரசு ஊழியரான காவல்துறையினர்தான். காவல்துறைக்கும் சேர்த்துத்தானே தொழிற்சங்க வாதி போராடு கிறான் என்று காவலர்கள் நினைப்பதில்லை. ஏனென்றால் ஏற்கனவே சொன்னதைப் போல காவல்துறையின் கருவே கவாத்து பயிற்சி தானே. அந்த கவாத்து கருவையே இந்த படத்தில் இயக்குனர் தமிழ் கவனத்துடன் கையில் எடுத்திருக்கிறார். இனி படத்துக்கு வருவோம்.
கதை 1998லிருந்து நகர்கிறது. பொழிலாறு என்ற இடத்தில் நடக்கும் காவல்துறை பயிற்சிக்கு 350 பயிற்சியாளர்கள் வருகின்றனர். இவர்களில் 1982ஆம் ஆண்டில் தோ்வு செய்யப்பட்டு, ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களினால் பயிற்சிக்கு அனுப்பப்படா மல் 16 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு குழுவினரும் உண்டு. இக்குழுவில்தான் படக் கதாநாயகனான விக்ரம் பிரபு இருக்கிறார். அறிவு என்ற பெயரு டன் வரும் இவர் குற்றவியல் நடைமுறையில் எம்.ஏ. படித்தவர். காவல்துறையினர் அராஜ கத்தால் தந்தையை இழந்தவர். இதனால் இயல்பாகவே இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க முழுக்க ஆக்ரமிக்கிறார். இவருடன் பாவல்நவகீதன், பிரகதீஸ்வரன், கார்த்திக் கண்ணன் ஆகியோரும் உண்டு. மூர்க்கக் குணமுடைய பயிற்சியாளராக லால், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் வருகின்றனர். படத்தில் பயிற்சிக்காக 16 வருடம் போராடி யவர்கள் பயிற்சியின் போதும் போராடு கிறார்கள் என்பதே கதை. வழக்கமாக உரி மைக்கு குரல் கொடுப்பவர்களை பயிற்சி என்ற பெயரி்ல் வதை செய்யும் நிகழ்வுகள் சீருடைத் துறையுடன் உடன் பிறந்ததாகும். இதனால் பயிற்சி மையத்தில் டாய்லெட் வசதி போதவில்லை என்று குரல் எழுப்பிய விக்ரம் பிரபுவிற்கும் அவரைச் சார்ந்தவர்களையும் பயிற்சி என்ற பெயரில் பழிவாங்குகிறார் லால். அதாவது அவா்கள் பயிற்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் பயிற்சியை விட்டே ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவரது பிளான். இதனால் பயிற்சியின் கொடுமை தாங்காமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். விக்ரமின் சித்தப்பாவாக வரும் பிரகதீஸ்வரனோ பயிற்சியின் கடுமை தாங்காமல் இறந்து விடுகிறார். இந்த நிகழ்வுகளெல்லாம் விக்ரம் பிரபுவின் உறுதியை மேலும் வைரமாக்குகின்றன. பயிற்சி மைய ஊழல்களை அம்பலப்படுத்து கிறார். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் ஏற்கனவே 9 ஸ்குவாட்களில் (குழு) நடக்கும் பயிற்சியில், நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் பயிற்சியாளர்களை மட்டும் பிரித்து இவா்களை 10ஆம் எண் ஸ்குவாடாக்கி இந்த குழுவிற்கு எம்.எஸ்.பாஸ்கரை பயிற்சியாள ராக்குகின்றனர். 1ஆவது பயிற்சி குழுவிற்கு லால் பயிற்சியாளராக இருக்கிறார்.
லால் பயி்ற்சியளிக்கும் குழுவிற்கும், பாஸ்கர் பயிற்சி அளிக்கும் குழுவிற்கும் இடையே சித்தாந்தத்தின் அடிப்படையில் வேறுபாடு அதாவது லால் பயிற்சிக்குழு காவல் துறை எனும் சிஸ்டத்தின் பழைய சித்தாந்தத்தை அடிபிறழாமல் பின்பற்றுவதாக இருக்கிறது. ஆனால் விக்ரம் பிரபு உள்ள பாஸ்கர் பயிற்றுநராக இருக்கும் குழு சிஸ்டத்தை சீர்திருத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்டதாக இருக்கிறது. இதனால் பயிற்சியின் முடிவில் நடக்கும் போட்டியில், விக்ரம் பிரபுவின் குழு வென்றா லும், அவர்களின் வெற்றி மறைக்கப்பட்டு, லால் பயிற்சிக் குழுவினர் வென்றதாக அறி விக்கப்படுகிறது. உண்மையையே விலை கொடுத்தாலும் கூட, அதிகாரத்தை ஒரு போதும் தோற்க விடக் கூடாது என்ற ஆதிக்க மனப்பான்மைக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன விக்ரம் பிரபு, அதிகாரம் என்பது சேவைக்கானதே தவிர, சீரழிப்பதற்கல்ல என்ற உறுதியுடன் மக்களின் சேவைக்காக சீருடையை பெருமையுடன் அணிகிறார். படமும் ஒரு நல்ல செய்தியுடன் முடிகிறது.
விக்ரம் பிரபு இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க கேரக்டருடன் பொருந்தி வருகிறார். படக் கருவை மனதில் நன்றாக உள்வாங்கி தன் பாத்திரத்தை சிறப்புடன் செய்திருக்கிறார். சித்தப்பாவாக வரும் பிரகதீஸ்வரன், வெள்ளேந்தி முருகனாக வரும் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தங்கள் பங்கை மனதில் படும்படி செய்திருக்கின்றனர். பெண் காவலராக வரும் அஞ்சலி நாயருக்கு வேலை இல்லை. அவரது பாத்திரமே ஏதோ வலிந்து திணிக்கப்பட்டதைப் போல தெரிகிறது. படம் முழுக்க சிந்தனையைத் துாண்டும் வசனங்கள் வருகின்றன. பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபுவிடம் பயிற்றுனர் ஈஸ்வரமூர்த்தி, “நீ என்ன ஜாதி” என்று கேட்க அதற்கு அவர், பொது இடங்களில் ஜாதியை சொல்லும் வழக்கமி்ல்லை என்கிறார். அதனால் கோப மடைந்த ஈஸ்வரமூர்த்தி, “சாதியை சொல்லா மலா நீ வேலைக்கு வந்தாய்…நீ என்ன புரட்சிக்காரனா” என்று கம்பால் விளாசித் தள்ளு கிறார். இதற்கு அடுத்த காட்சியாக கார்ல் மார்க்சின் புத்தகத்துடன் விக்ரம் பிரபு படுத்தி்ருக்கும் காட்சியை காட்டுகி்றார் இயக்கு னர். இதன்மூலம், மார்க்சியமே ஆதிக்க முறைக் கான தீர்வு என்பதை படம் பார்ப்பவர்களை உணர வைக்கிறார் இயக்குனர்.
இந்த படம் காவலா் வேலைக்கு அளிக்கப் படும் பயிற்சியை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே வேலைக்கு முன் பயிற்சி அளிப்பது எதற்காக என்ற வினாவிற்கு படத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின் றன. உதாரணத்திற்கு, ஒரு பயிற்றுநர், “உள்ளத் தையும் உடம்பையும் உறுதிப்படுத்தும் இடமே பயிற்சி” என்கிறார். இன்னொரு பயிற்றுநர், போட்டி மனப்பான்மையை வளா்க்கும் இடமே என்கிறார். இன்னொருவர், “எளியவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக கடவுளுக்கு அடுத்தபடியாக மன்றாடுவது காவலர் களிடம்தான்.. எனவே சேவை செய்வதில் கடவுளைப் போல இரு” என்கிறார். “காவலர் பணியை பணியாக நினைத்தால் வருமானம் கிடைக்கும். சேவையாக நினைத்தால் கடவுளின் நிலைக்குச் செல்வாய்” என்று நெஞ்சைத் தொடும் வசனங்களும் நிறைய உண்டு. கட்டளைக்கு கீழ்படிதலைத் தவிர கேள்விகள் கேட்கக் கூடாது என்பதையே தாரகமந்திரமாகக் கொண்டு அளிக்கப்படும் காவலர் பயிற்சிகளில், கட்டுப்பாட்டை மட்டுமல்ல சேவை உள்ளத்தையும் சோ்த்தே கற்றுக் கொடுப்பது அவசியம். பண்பைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி பாதகமாக இருந்து விடக் கூடாது. உண்மை இருக்க வேண்டிய இடத்தில் ஊழலுக்கு வேலை இ்ல்லை என்பது போன்ற நல்ல செய்திகள் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. இம்ரானின் இசை இதம். படத்தின் விறு விறுப்பு பல இடங்களில் தொய்வடைந்தாலும் அது அடுத்தடுத்த காட்சிகளில் சரியாகி விடுகிறது. பார்க்கத் தகுந்த படம். (ஓடிடி வெளியீடு)