tamilnadu

img

சென்னை செங்குன்றத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் - மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரியின்  மகன் எஸ்.பிரவினுக்கும், தா.சந்திரகுமார் - ச.ஜீவநந்தினியின் மகள் எஸ்.பேபி சாளினிக்கும் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் சென்னை செங்குன்றத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.