tamilnadu

img

வாலிபர் சங்க நடைப்பயணம் துவங்கியது!

மதுரை, டிச. 20 - கார்ப்பரேட் முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தின் கொள்ளைக்காக, அரிட்டாபட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக் களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் (DYFI) மூன்று நாள் நடைப்பயண பிரச்சார இயக்கத்தை துவங்கினர். நடைப்பயணத்தில் இணைந்த அரிட்டாபட்டி கிராம மக்கள் அரிட்டாபட்டி மந்தையில் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோரின் உற் சாக ஆதரவு மற்றும் வரவேற்புக்கு இடையே வெள்ளிக்கிழமையன்று காலை துவங்கிய வாலிபர் சங்கத்தின் நடைப்பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னரும் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், திரைப்பட இயக்கு நர் கௌதம் ராஜ் ஆகியோர் கொடி யசைத்துத் துவக்கி வைத்தனர். அரிட்டாபட்டியில் நடைப்பயணம் துவங்கியபோது, வாலிபர் சங்கத்தின ரோடு தங்களையும் இணைத்துக் கொண்ட கிராம மக்கள் கூடவே பயணப் பட்டனர்.

உற்சாக வரவேற்பு அளித்த அ.வள்ளாலபட்டி கிராமம்

நடைப்பயணம் அ.வள்ளாலபட் டிக்குச் சென்றபோது, ஒட்டுமொத்த கிராம மக்களும் அங்குள்ள வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு திரண்டு - ஊர் பெரியவர்கள் (அம்பலக்காரர் கள்) தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். டங்ஸ்டன் சுரங்கத்தின் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாலிபர் சங்கத் தினர் மேற்கொண்டுள்ள இந்த நடைப் பயணத்திற்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  மக்களை யும், மண்ணையும் காக்கும் இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று வாழ்த்தினர். வாழ்த்து முழக்கம் எழுப்பிய புலிப்பட்டி கிராமப் பெண்கள் புலிப்பட்டியை சேர்ந்த மக்கள் வாலிபர் சங்க நடைப்பயணக்குழு வினருக்கு குளிர்பானங்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கி வர வேற்பு அளித்தனர். இந்தியாவின் மாபெரும் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர், அரிட்டாபட்டி பகுதி மக்களின் உரிமைக்காகவும், வாழ்வாதாரத்திற் காகவும் மேற்கொண்டுள்ள நடைப்பய ணம் மன நெகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவிப்ப தோடு, அவர்களோடு இணைந்து கனி மச் சுரங்கத் திட்டத்தை முறியடிப் போம் என்றனர். வாலிபர் சங்கம்  வாழ்க! வாழ்க!! என்றும் முழக்கமிட்டனர்.

அழகர் கோயிலில் நிறைவு

முதல் நாளில் அரிட்டாபட்டியில் துவங்கி புலிப்பட்டி, அ. வல்லாளப் பட்டி, செட்டியார்பட்டி, கிடாரிப்பட்டி, அழகாபுரி வழியாக அழகர்கோவில் வரை சென்ற வாலிபர் சங்க நடைப் பயணக் குழுவினர், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தின் பின்னுள்ள ஆபத்து, கார்ப்ப ரேட் முதலாளிகள் - ஒன்றிய பாஜக அர சுக்கு இடையிலான கூட்டு ஆகிய வற்றை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தனர். வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் வி. சிங்காரவேலன், மாநிலப் பொரு ளாளர் எஸ். பாரதி, மாவட்டத் தலைவர் வெ. கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் டி. தமிழரசன், மாவட்டப் பொருளாளர் எஸ். பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலாளர் த. செல்வா, மாநகர் மாவட்டத் தலைவர் அ. பாவல் சிந்தன், மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ். வேல்தேவா உள்ளிட்டோர் நடைப்பய ணம் மேற்கொண்டனர்.

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆதரவு

மேலும், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு குழு வினர் சுந்தரேசன், கருப்பணன், ராம நாதன், பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.  ரவி, மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பி னர் எஸ்.கே. பொன்னுத்தாய், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ. தனசேகரன், விவசாயி கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ். ராஜாமணி, வாலிபர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் எம். கண்ணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கா. பிருந்தா  மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.