மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை, தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்துள்ளது. கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் ஒன்றிய பாஜக அரசால் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் வேதாந்தா எடுத்துள்ளது.
ஏல அறிவிப்பு வெளியான அறிக்கையில் கீழ்க்கண்ட
ஊர்கள் உள்ளன.
1. செட்டியார்பட்டி
2. அ.வல்லாளப்பட்டி
3. நடுவளவு
4. தெற்கு வளவு
5. செட்டியாபட்டி
6. சண்முகநாதபுரம்
7. அரிட்டாபட்டி
8. கூலாணிப்பட்டி
9. எட்டிமங்கலம் மேற்கு
10. நாயக்கர்பட்டி
11. மாங்குளம் கிழக்கு
தொல்லியல் - வரலாற்றுச் சின்னங்கள்'
2300 ஆண்டுகள் தொன்மையான மாங்குளம் தமிழிக் கல்வெட்டு மீனாட்சிபுரம் ஒவா மலையில் அமைந்துள்ளது. இங்கே நான்கு குகைத்தளத்தில் மொத்தம் ஆறு தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழி யன் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதில் செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தை பெறு வதற்கு இந்த கல்வெட்டுகளும் முக்கிய காரணம். மாங் குளம் கல்வெட்டுதான் இதுவரை கிடைக்கப்பெற்ற கல் வெட்டுகளில் காலத்தால் பழமையானதாகும். இதே போல அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் ஈரமாயிரமாண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சமணர் படுக்கை
மீனாட்சிபுரம் ஓவா மலையில் உள்ள நான்கு குகை தளத்தில் 50க்கும் மேற்பட்ட சமணர் கற்படுக்கைகளும், அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் 10க்கும் மேற்பட்ட சமணர் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பமும், அதன் கீழே தமிழ் வட்டெழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது. கழிஞ்ச மலை அடிவாரத்தில் ஆனைகொண்டான் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் 700 ஆண்டுகள் பழமை யான இரு மடை தூண்கள் உள்ளன. மீனாட்சிபுரம் ஓவா மலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும், அரிட்டா பட்டி கழிஞ்சமலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற் படுக்கைகள் கொண்ட குகைத் தளமும் மகாவீரர் சிற்ப மும், முற்கால பாண்டியர் குடைவரை சிவன் கோயி லும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாது காக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழமையான தர்கா
கழிஞ்சமலையின் வடக்கு முனையில் 200 ஆண்டுகள் பழமையான ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள் ளது. வல்லாளபட்டி பள்ளிவாசலும் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பல்லுயிர்கள் வாழிடம் வெள்ளரிபட்டி - நரசிங்கம்பட்டி - பெருமாள்பட்டி - அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடை யில் உள்ள பெருமாள் மலை வனப்பகுதி அமைந்துள்ளது. சுமார் 5.5 கி.மீ நீளமும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட பெருமாள் மலை - புள்ளி மான், மிளா மான், தேவாங்கு, காட்டு பூனை, மரநாய் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்கு களின் வாழிடமாக விளங்குகிறது என கூறப்படுகிறது. பெருமாள் மலையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேற்குச் சரிவும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பகுதிக்குள் வருகிறது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 53.580 ஹெக்டேர் பரப்ப ளவு கொண்ட மலைக் குன்றுகளையும், அரிட்டாபட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 139.635 ஹெக்டேர் பரப்ப ளவு கொண்ட மலைக் குன்றுகளையும் உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் (477.4 ஏக்கர்) பரப்பை கடந்த 22.11.2022 அன்று தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரி மரபு தலமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. பல்லுயிர் மரபு தலமாக அறிவிக்கப்பட்ட கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை / ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளும் இந்த 5000 ஏக்கர் சுரங்கம் ஏலம் விடப்பட்ட பகுதியில் வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள், இருபதுக்கும் மேற்பட்ட பாலூட்டி வகை காட்டு விலங்கு கள், இருபதுக்கும் மேற்பட்ட ஊர்வன வகை என பல்வேறு காட்டு விலங்குகளின் புகழிடமாக உள்ள மலைக்குன்று கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. பல்லுயிர்களின் வாழிடமாக உள்ள பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, அரிட்டாபட்டி - மீனாட்சி புரம் பல்லுயிரி மரபு தலம் ஆகியவற்றின் நிலை என்ன என்பதை ஒன்றிய அரசு விளக்க தரவில்லை.
மருந்துக் குழி
குடை வரை கோவில் அருகே பாறையில் ஒரு குழி உள்ளது. அதற்கு பெயர் மருந்துக் குழி என்று சொல்லப்படு கிறது.அந்த காலத்தில் மலை பகுதியில் உள்ள மூலிகை தாவரங்களை வைத்து மருந்து தயாரிக்கும் இடமாகவும் இருந்துள்ளது.
வாழ்வாதாரத்தை பாழாக்க முயன்றால்...
‘எங்களது மண், மலை, நீர், உயிர் வளங்களைப் பறிக்க நினைத்தால், அகிம்சை வழியில் போராடுவோம். எங்கள் வாழ்வாதாரத்தைப் பாழாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முயன்றால் உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கவும் நாங்கள் தயார்’ என டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை எதிர்க் கும் அரிட்டாபட்டி உள்ளிட்ட பாதிக்கப்படும் கிராம மக்கள் கண்ணீர் மல்கக் கூறினர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ரகசிய ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளால் தற்போது போரா டும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவித அச்சமும் ஏமாற்றமும் விரக்தியும் கொண்ட மனநிலையோடுதான் அவர்கள் காணப்படு கின்றனர். மறைந்த சுற்றுச்சூழல் போராளி அரிட்டாபட்டி ரவிச் சந்திரனின் அக்கா விமலா கூறுகையில், ‘இந்த மண்ணின் வளங்களைக் காப்பதற்காக அரிட்டாபட்டி மக்களும் அரு கிலுள்ள வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், தெற்குத்தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களும் போராடி வருகின்ற னர். நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காத கார ணத்தால் போராட்டம் மேலும் தீவிரமாகும். இங்குள்ள வளங்களையும், பல்லுயிர்ச்சூழலையும் மட்டுமன்றி இந்த மக்களையும் அழிப்பதற்கு உங்களின் மனசாட்சி எவ்வாறு இடமளிக்கிறது? எங்கள் உயிர்போகும்வரை நாங்கள் போராடுவோம்’ என்றார்.
விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ராமஜெயம் என்ற பெண் கூறுகையில், ‘எங்களுடைய ஊர் எங்களின் உயிர். எங்களுடைய மண் எங்களின் மானம். இதற்காக நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று சட்ட மன்றத்தில் எதிர்த்து தீர்மானம் இயற்றியுள்ளது. இதுவரை ஒன்றிய அரசு எந்தவித தகவலும் தரவில்லை. இதன் காரண மாக எங்களுடைய மக்கள் இரவு நேரங்களில் மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் மன வேத னைக்கு ஆட்பட்டுள்ளனர். இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்து, முஸ்லீம், சமணம் என பல் சமயங்க ளின் தொகுப்பாக அரிட்டாபட்டி திகழ்கிறது. அந்தந்த மதம் சார்ந்தோர் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டி வாழ்கிறோம்’ என்றார். தெய்வகலா என்ற பெண் தெரிவிக்கையில், ‘டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்க ளும், இங்குள்ள இயற்கை வளங்களும் கடுமையாக பாதிப்பிற்கு ஆளாகும். எங்களது போராட்டத்தை இத் தோடு நிறுத்திவிடுவோம் என யாரும் நினைக்க வேண்டாம். நல்ல முடிவு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம். ஊர்ப்பொது இடங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் இதனைக் கைவிடுவது ஒன்றிய அரசின் கைகளில்தான் உள்ளது’ என்றார்.
தொடர் போராட்டங்கள்
அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, மீனாட்சிபுரம், நர சிங்கம்பட்டி, மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், வணிகர்கள் சங்கம் என பொதுமக்கள் கிராமம் கிராமாக தொடர்ச்சியாக டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் போராட்டம் என பல்வேறு வகையில் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 15 அன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் தலைமையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு கட்சியினர் பல்வேறு இயக்கங்கள் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வரு கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 24 கிராமங்கள் வழியாக சுரங்க எதிர்ப்பு நடைபயணம் நடைபெற்றது. கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு மட்டுமே முயலும் வேதாந்தா குழுமத்திற்கும், அதற்கு ஆதரவாகச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் அதிகாரத்திற்கும் வாழ்வாதாரங்களை பல்லுயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கிராமமக்களும் இடையே இந்த போராட்டம் நடைபெறுகிறது. கிராமமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, திட் டத்தை ரத்த செய்வதே ஒன்றிய அரசுக்கு அழகு. இல்லை யெனில் கொந்தளிப்பான மக்களின் போராட்டம் வேதா ந்தா குழுமத்தை விரட்டியடிக்கும்.