கோயம்புத்தூர், மார்ச் 24 – ஏ.ஜி.நூரானி எழுதி ஆர்.விஜய்சங்கர் மொழி பெயர்ப்பில் ‘ஆர்எஸ்எஸ் - இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்கிற நூல் வெளியிட்டு விழா கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன் வரவேற்புரையாற்றி னார். இந்நிகழ்வில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், கேரளமாநில முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்நூலினை தமிழில் மொழி யாக்கம் செய்த ‘பிரண்ட்லைன்’ இதழின் ஆசிரிய ருமான ஆர்.விஜய்சங்கர் மற்றும் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், கலை இலக்கிய பெருமன்றத்தின் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அறிவார்ந்த படைப்பு
முன்னதாக, இந்நூலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபிவெளியிட்டு பேசுகையில், ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கான அச்சுறுத்தல் என்று இந்நூலின் தலைப்பில் உள்ளது. ஆனால் இந்நூலை முழுமையாக வாசிப்பவர்களுக்கு இந்தியாவிற்கே பேரழி வை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் என்பது தெரிய வரும். 91 வயது நிரம்பிய ஏ.ஜி. நூரானி பல்வேறு ஆதாரங்களுடன் இந்நூலை படைத்துள்ளார். இதனை மிக அற்புதமாக தமிழில் ஆர்.விஜய் சங்கர் மொழி பெயர்த்துள்ளார். தன்னுடைய இதழியல் பணிகளுக்கிடையே மிக சிரத்தை எடுத்து தமிழில் மொழிபெயர்த்து விஜய்சங்கர் வெளியிட்டுள்ளார். இந்நூல் பல்கலை களஞ்சிய மாக, கலை படைப்பாக, அறிவார்ந்த படைப்பாக திகழும் என்று உறுதியளிக்கிறேன். இந்நூல் வெளிவருவதற்கான முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் அவர் பேசியதாவது: இந்தியா என்கிற கருத்தை ஆதரிக்கக்கூடிய பக்கபலமாக இருக்கக்கூடிய நாம் அனைவரும் இந்தியர்கள் என்கிற உணர்வோடு இருக்கிறோம். ஒன்றிணைந்து இருக்கிறோம். வேற்றுமை யில் ஒற்றுமை, ஒன்றுபட்ட இந்தியா என்கிற கருத்தியலை பாதுகாப்பதில் தமிழ்நாடு, கேரளா இந்த இரு மாநிலங்கள் முன்னணி யில் இருக்கின்றன. இந்திய குடிமக்கள் என்கிற வகையில் வெவ்வேறு சமயத்தை சார்ந்தவர்கள் இருக்கலாம், எம்மதமும் சம்மதமே என்கிற சமத்துவத்தை பாதுகாத்து வருகிறோம். காந்தி, நேரு, பெரியார் போன்ற தலைவர்களுக்கு மதம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. மகாத்மா காந்தி, தான் ஒரு சனாதன இந்து என்றே அறிவித்தார். அப்படியான சனாதன இந்துவை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்? ஏனென்றால் காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று மட்டும் சொல்லிக்கொள்ள வில்லை. மாறாக இந்துவாக மட்டுமில்லை, இஸ்லாமியனாக, புத்தனாக, சீக்கியனாக, சமணனாக இருக்கிறேன் என்று மற்ற மதங்களின் பால் அன்பு காட்டக்கூடிய தலைவராக இருந்தார் என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நமது ஒற்றுமையே அவர்களது அச்சம்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கியமான மூன்று எதிரிகள் யார் என வரையறுத்துள்ளனர். இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், கம்யூ னிஸ்ட்டுகள் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ள னர். மக்கள் பல்வேறு அடையாளங்களுடன் வாழ்கிறார்கள். ஆனால் பாசிச சக்திகள் குறிப்பிட்ட இனம், குறிப்பிட்ட நிலம் என்றும், குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமான நிலம் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் மனித குலத்தின் மரபணுவை எடுத்து ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட இனம் என்கிற ஏதும் இல்லை என்பதும், எல்லா இனங் களிலும் கலப்பு நடந்துள்ளது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கான அஸ்திவாரமே மதங்கள் பலவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்கிற உணர் வோடு இருக்கிறோம். அதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இடையூறாக உள்ளது. இந்த ஒற்று மையை சீர்குலைக்க வேண்டும் என்பதற் காகவே பல்வேறு கலவர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
ஆர்எஸ்எஸ்-சின் அமைப்புச் சட்டமே காந்தி யின் கொடூர படுகொலைக்கு பின்னர்தான் உரு வாக்கப்பட்டது. நாங்கள் ‘கலாச்சார தேசிய வாதத்தை’ முன்னிறுத்துகிற அமைப்பு என ஆர்எஸ்எஸ் சொல்கிறது. ஆனால் கலாச்சாரம் என்பதும் தேசியவாதம் என்பதும் வெவ்வேறு கருத்துகளை கொண்டது. கலாச்சாரங்கள் மனி தனை மேம்படுத்த வேண்டும் என்றுதான் நாம் கருதுகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் முன்னி றுத்துகிற கலாச்சாரம் மிக மோசமானது என்று அன்றே மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வெளிப் படுத்தியுள்ளார். நாசிசம், பாசிசம் என்கிற சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம். ஹிட்லரின் கட்சியின் பெயர் ஜெர்மானிய சோச லிச தொழிலாளர் கட்சி என்பதாகும். அப்படி யென்றால் ஹிட்லர் சோசலிசத்திற்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் கட்சியை நடத்தி னர் என்றா சொல்லமுடியும்? ஆர்எஸ்எஸ்-சும் ஹிட்லரின் தீர்வுதான் நமக்கானது என்று சொல்கிறது. அந்த அமைப்பு சட்டத்தின் குரூரங்களை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. சமீபத்தில் ஹரித்துவாரில் மத நாடாளு மன்றம் என ஒன்று நடைபெற்றது. இதில் பிரதமர், உள்துறை அமைச்சர், உபி முதல்வர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் வழிமொழிந்த அனை வரும் ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கொக்கரித்த னர். இதனை பிரதமர் உள்ளிட்ட யாவரும் மறுத்து பேசவில்லை என்பதை நினைவுகூர்கிறேன். இதுதான் இவர்களின் அடிப்படைத் தத்துவ மாகும். இந்த இன அழிப்புக்கான திட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருவதை ‘ஜெனோசைட் வாட்ச்’ (இனப்படுகொலை கண் காணிப்பு) என்கிற அமைப்பு ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளது. தன்னார்வல தொண்டு நிறுவனமான இவ்வமைப்பு உலகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தியாவிலும் இத்தகைய இன அழிப்பு திட்டங்கள் நடை பெறும் என வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் நாம் இந்த மரண வியாபாரிகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும். இதற்கான பரந்து விரிந்த எதிர்ப்பு மேடையை உருவாக்க வேண்டும். முற்றிலும் பிற்போக்கு வலதுசாரித் தத்துவத்தை வைத்துள்ள ஆர் எஸ்எஸ் பரிவாரங்கள் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துகிறார்கள். உயரிய மனித குலத்தைக் காக்கும் தத்து வத்தைக் கொண்டிருக்கிற நாம் இவர்களைத் தனிமைப்படுத்துவது என்ற இலக்கை எட்ட கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டும். அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். கருத்தியல் ரீதியாக மோதுவது மட்டுமல்ல, நேரடிக் கிளர்ச்சி களுக்கும் தயாராக வேண்டும் என்றார். இவ்வாறு எம்.ஏ.பேபி பேசினார்.
ஜி.ராமகிருஷ்ணன்
இதைத்தொடர்ந்து, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “இந்நூலை எங்கு வெளியிடுவது என கலந்தாலோசனை செய்கிறபோது கோவை நகரத்தில் வெளியிட்டால்தான் சிறப்பாக இருக்கும் என முடிவெடுத்தோம். கடந்த ஜனவரி 30 காந்தியின் நினைவு நாளில் காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றார் என்று பேசினேன். அப்போது, அப்படி சொல்லக்கூடாது என்று இங்குள்ள காவலர்கள் தர்க்கம் நடத்தி தள்ளு முள்ளு ஏற்படுத்தியதை அனைவரும் அறி வீர்கள். இதுபோன்றுதான் ஆர்எஸ்எஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை பயன்படுத்தி அரசு இயந்திரத்தில் ஊடுருவி அதை மதவெறி மயமாக்கும் செயலை திட்டமிட்ட முறையில் செய்து வருகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் வளர்ச்சி என்பது சிறுபான்மை வகுப்புவாதத்தை தூண்டி விட்டு தேச ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்ப தாக அமையும். ஆர்எஸ்எஸ் இந்திய அர சியலமைப்பு சட்டத்தின் நான்கு அடிப்படைத் தூண்களை தகர்க்கிறது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொரு ளாதார இறையாண்மை ஆகியவை தாக்கு தலுக்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்நூல் ஆர்எஸ்எஸ் குறித்து அம்பலப்படுத்தியுள்ளது. இதனை பரவலாக முன்னெடுத்துச்செல்வோம்” என்றார்.
இந்தியாவா... பாஜகவா...?
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், பட்டினி குறியீட்டில், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், வேலைவாய்ப்பில், சுகாதாரத்தில் என அனைத்திலும் மோடியின் ஆட்சியில் நமது நாடு மிகவும் பின் தங்கியுள்ளது. பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட நமக்கு முன்னே உள்ளன. இருப்பினும் தேர்தல்களில் பாஜக வெல்கிறதே என்கிற ஆச்சரியத்திற்கு இந்நூல் பதில் அளிக்கிறது. இதனை முழுமையாக வாசித்தால் இவர்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற விடையும் உள்ளது. இவர்களின் உத்தி, தந்திரம், பொய் பித்தலாட்டங்கள் அனைத்தையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. எதிர் வரும் காலத்தில் தேர்தல் களத்தில் பாஜகவா அல்லது இந்தியாவா என்கிற நேர் கோட்டில் இதனை எதிர்கொள்ள வேண்டும். கட்சிகள் தங்களின் எல்லைகளை மறந்து இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
‘பத்திரிகையாளரின் வேலை’
நூலின் மொழிபெயர்ப்பாளர் ஆர்.விஜய்சங்கர் பேசுகையில், எப்படி துணிச்சலோடு இந்நூலை மொழி பெயர்த்தீர்கள் என நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னுடைய துணிச்சல் என்னுடைய தந்தையார் தோழர் பி.ராமச்சந்திரன் அவர்களிடமும் தாயார் ஜானகியிடமும் இருந்து பெற்றது. நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர் ; நடுநிலையோடு இருக்க வேண்டாமா என கேட்கின்றனர். அவர்களுக்கான பதில், நடுநிலை என்பது போலியானது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதே பத்திரிகையாளரின் வேலை. அதில் என்னளவிற்கு உரிய பங்கினை ஆற்றி வருகிறேன். இந்த காலத்தில் இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் கைகளில் சேர வேண்டும் என்கிற உந்துதலும், அக்கறையாலும் தான் என்னுடைய இதழியல் பணிகளுக்கிடையேயும் இந்நூலை வெளிக்கொண்டு வந்துள்ளேன். சமூகத்தின் மீதான அக்கறை உள்ள யாவருக்கும் நேரம் தானாக வந்துவிடும் என்றார். முன்னதாக, இந்நிகழ்வில் நூலாசிரியர் விஜய்சங்கரின் தாயார் ஜானகி உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். மேலும், அரங்கம் நிறைந்த நிகழ்வில் வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் கலைக்குழுவின் இசை நிகழ்வு உள்ளிட்டவை நடைபெற்றன. நிறைவாக தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி நன்றி கூறினார்.