சென்னை, மே 15- கல்வித்துறையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய வற்றை பாதுகாக்க கேரளாவும் தமிழ கமும் இணைந்து போராடுவோம் என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் பிந்து கூறினார். புதிய தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ நிராகரிப்போம் என்ற தலைப் பில் சென்னையில் (மே 15) ஞாயி றன்று அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணத்தைப் பார்த்தோமானால் அது பலவிதமான முரண்பாடுகளையும் பல சிக்கல் களையும் குறிப்பிட்ட பிரிவினரைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் வகையிலும் உள்ளது. நமது அரசி யல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள மதச் சார்பின்மை குறித்து இந்த கல் விக்கொள்கை மவுனம் சாதிக்கிறது.இப்படி எதுவும் குறிப்பிடாமல் இருப்ப தும் ஒருவகை கிரிமினல் குற்றம் தான். இட ஒதுக்கீடு எந்தளவுக்கு அவசியம் என்பது குறித்து புதிய கல்விக்கொள் கையில் ஒரு வரிகூட கிடையாது. தற்போதுள்ள அரசியல் சமூகப் பொருளாதார சூழலில் மதவாத சக்தி கள் உலக மூலதனம் மற்றும் கர்ப்ப ரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். கல்வியைக் காவிமயமாக்கவும் வர்த்தக மயமாக்க வும் செல்வந்தர்கள் மட்டுமே படிக் கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான பல்வேறு ஆலோசனைகள் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள் ளன. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது 1986 ஆம் ஆண்டு புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப் பட்டது. 34 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள “புதிய தேசிய கல்விக்கொள்கை 2020’’ முந்தைய கல்விக்கொள்கை யிலிருந்து பல்வேறு வகையில் மாறு பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்து கல்விக்கொள்கையால் நாட்டில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை பரிசீலிக்கத் தவறிவிட்டது.
பண்டைய இந்தியா குறித்த பெரு மிதத்தை மாணவர்களுக்கு போதிக்க இந்த புதிய கொள்கை முயற்சிக்கி றது. பண்டைய இந்தியா என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட் டுமே படிக்க அனுமதிக்க வேண்டும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதி யாகவும் பின்தங்கிய பிரிவினரைக் கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான் அது. கிராமப்புற மற்றும் மலைப் பிர தேசங்களில் வாழும் பழங்குடியின மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்ப தற்கான சூழல் குறித்தும் புதிய கொள்கையில் ஏதுவும் கூறப்பட வில்லை. அந்த மாணவர்களைக் கல்வியிலிருந்து விலக்கிவைப்ப தற்கான முயற்சியே இது. நாட்டில் தற்போதுள்ள சமூக பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏதும் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கையில் இல்லை. தரமான கல்விக்கான உத்த ரவாதம் இல்லை. மாறாகச் சுயநிதி கல்வியை ஊக்கப்படும் ஆலோசனை கள் அதிகமாக உள்ளன. உயர்கல்வி யை மேலும் வணிகமயமாக்குவதற் கான பல்வேறு ஆலோசனைகள் இந்த புதிய கொள்கையில் உள்ளன. எனவே இந்த கொள்கையை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
கேரளாவின் மாற்றுப் பாதை
இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறும் கேரளாவில் நாங்கள் மக்கள் பங்கேற்புடன் மாற்றுக் கல்விக்கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். பல்வேறு அரசுப்பள்ளி கள் உலகத்தரத்திற்கு மாற்றப்பட்டுள் ளன. சர்வதேச தரத்திற்குப் பள்ளி களில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். அரசு, ஆசிரியர்கள், இந் நாள் முன்னாள் மாணவர்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள், என அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு தரமான அனைவருக்குமான இலவச கல்வி யை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேம்பாட்டு குழுக் களை உருவாக்கி அவை அளிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது நாங்கள் உயர் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். புதிய புத்தாக்க மற்றும் அடைகாக்கும் மையங்களைக் கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி வருகிறோம். இதனால் புதிய அறிவு சார் சமூகத்தை ஏற்படுத்த முயற்சிக் கிறோம். இதற்கான திட்டமிடலை உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து துவங்குகிறோம். கேரளாவும் தமிழ கமும் கல்வித்துறையில் ஜனநாய கம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய வற்றைப் பாதுகாக்க இணைந்து போராடவேண்டும். இதன் மூலம் நமது இளம் தலைமுறையினருக்கு ஒளிமய மான எதிர்காலத்தை உருவாக்க முடி யும். இதற்கான பாதையை நோக்கி நாம் இணைந்து பயணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர் பெருமன்ற அகில இந்தி யத் தலைவர் சுவம் பானர்ஜி தலைமை யில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்தி தேவி வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் விக்கி மகேசரி அறிமுக உரையாற்றினார். கருத்தரங்கை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி, மகா ராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச் சர் ஜிதேந்திர அவாத், பினாய் விஸ்வம் எம்.பி., அகில இந்திய பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அருண்குமார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆர்.திருமலை ஆகியோரும் பேசினர். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்தரங்கை நிறைவு செய்து பேசினார். தமிழ்நாடு மாநிலச் செய லாளர் எம்.குணசேகர் நன்றி கூறினார்.