செங்கல்பட்டு, மார்ச் 11- தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களை நடத்தவிருப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் செங்கல் பட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் முப்பெரும் விழா நடை பெற்றது. வாழும் வரலாறு என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா, தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் சந்தா வழங்கும் விழா, பல்வேறு கட்சியி லிருந்து மார்க்சிஸ்ட் கட்சியில் இணை யும் விழா என முப்பெரும் விழா, கட்சி யின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பேசியதாவது: ஒன்றிய அரசு விமானங்களை விற்பனை செய்து விட்டது. இனிவரும் காலங்களில் ரயில்களும் அரசுக்கு சொந்தமாக இருக்காது, வங்கிகள் விற்கப்பட்டு விட்டது, 39 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய எல்ஐசி நிறுவ னத்தையும் தனியாருக்கு விற்பனை செய்ய பேரம் நடந்துகொண்டு இருக்கி றது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்யப் போவதாக மோடி கூறி வருகிறார். அரசு நிலங்களை விற்று பணமாக்கி அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிலைக்கு இந்த ஒன்றிய அரசு தள்ளி யுள்ளது. இப்படிப்பட்ட அரசு மக்கள் நலனை எப்படி பாதுகாக்கும்?, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என ஆரம்பம் முதலே மார்க் சிஸ்டுகள் கேட்டோம். அவர் அனுமதி கொடுத்திருந்தால் இந்திய நாடு முழுவதுக்கும் தடுப்பூசி தயாரித் துக் கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறு வனத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மாறாகத் தனியார் தொழிற்சாலை களுக்கு ரூ4000 கோடி பணத்தையும் மருந்து தயாரிப்பதற்கான அனுமதியும் கொடுத்துவிட்டது. பின்னர் அந்த தனியாரிடமே விலைகொடுத்து தடுப்பூசியை வாங்குகிறது. செங்கல்பட்டு, ஊட்டி, இமாச்சல் பிரதேஷ் ஆகிய இடங்களில் அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இல்லை. தனியார் கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைக்கும் வேலையை மோடி செய்து வருகிறார். ஆட்டோ தொழிலாளி பேருந்து முதலாளி கடன் வாங்கினால் தள்ளுபடி கிடையாது, விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது,
கல்வி கடன் குறைந்தபட்ச வட்டியைக் கூட தள்ளுபடி செய்வது இல்லை, ஆனால் கடந்த 7 ஆண்டு ஆட்சியில் மோடி அரசாங்கம் 8 லட்சம் கோடி ரூபாயை முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வு, தமிழகத்தில் இந்தித் திணிப்பு என மக்கள் விரோத செயல்பாடுகளை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. இந்த ஆட்சி நீடித்தால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டம் பூதா கரமாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் மட்டுமே வேலை வழங்கப்படுகின்றது. அரசுத் துறையில் செவிலியர் முதல் தூய்மை பணியாளர் வரை ஒப்பந்த முறையில் தான் பணிக்கு எடுக்கப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட இந்த அவலம் திமுக ஆட்சியில் மாற வேண்டும்.
வெள்ளையர்கள் ஆட்சியில் தமிழகம் முழுவதும் 9 லட்சம் ஏக்கர் பஞ்சிமி நிலம் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகக் கணக்கில் உள்ளது. இந்த நிலம் தற்போது பட்டியலின மக்களிடம் இல்லை. விற்பனை செய்தால் செல்லாது என அந்த திட்டத்திலிருந்தும் கைமாறி யுள்ளது. வரும் காலத்தில் உள்ள அனைத்து பஞ்சமி நிலங்களையும் மீட்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்த உள்ளது. கோயில் சொத்துக் களை தமிழகம் முழுவதும் மடாதிபதிகள் அனுபவித்துவருகின்றனர். அந்த நிலங்களை மீட்டு ஏழை எளிய மக்க ளுக்கு வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் நீண்ட காலங்களாகக் குடி யிருந்து வரும் எளிய மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுக்க வேண்டும்.
இதற்கான போராட்டங்களை யும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் அ.சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதே வன், வி.அரிகிருஷ்ணன், கே.சேஷாத்திரி, க.புருஷோத்தமன், க.பகத்சிங் தாஸ், வட்டக்குழு உறுப்பி னர்கள் கே.வேலன், எஸ்.ராஜா, எஸ்.ரவி, எம்.செல்வம், எம்.குமார், எஸ்.குணசேகரன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர் தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் சந்தா, மற்றும் கட்சி நிதி யினை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் வழங்கினார்.