தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்துவோம்!
மே தின உரையில் இலங்கையின் இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதி
கொழும்பு, மே 3 - இலங்கையில் புதிய அரசியல் யுகத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், ஜனாதி பதி அனுரகுமார திஸாநாயக்க கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்ற மே தின மாபெ ரும் பொதுக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாற்றினார். லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்நிகழ்வில், 65 ஆண்டுகால போராட்ட வர லாறு கொண்ட தமது இயக்கம், முதல்முறை யாக அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தைத் துவங்கியுள்ளதாக அறிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்ப மக்களை அணிதிரட்டுகிறோம் “நீண்ட காலமாக இந்த மே தினத்தை கொண் டாடி வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நமது நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்காக மக்களை அணிதிரட்டுவதாக இருந் தது. இன்று முதல் தடவையாக அதிகாரத்தைக் கைப்பற்றி இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற் காக மக்களை அணிதிரட்டும் மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்துகிறோம்” என்று உணர்ச்சிகர மாக தமது உரையைத் தொடங்கிய அனுர குமார திஸாநாயக்க, முந்தைய ஆட்சியின் வீழ்ச்சியை விளக்கினார்.
பரம்பரை அரசியலின் அதிகார வரைபடம் அழிப்பு
“நீண்ட காலமாக அவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள். தந்தை, சகோதரன், மகன், பேரன் என பரம்பரை பரம்பரையாக அதிகார வரை படம் நீண்டிருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் 21 அன்று, இந்த நாட்டு மக்கள் மிகவும் தைரிய மான முடிவெடுத்தார்கள். தலைமுறை தலை முறையாக நீண்டிருந்த அதிகார வரைபடத்தை முழுமையாக அழித்து, சாதாரண மக்களுக்கு அதிகாரத்தை மாற்றித் தந்தார்கள்” என்றார். முன்னோக்கிச் செல்லும் வடக்கு - கிழக்கு மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஒற்றுமை மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய திஸா நாயக்க, “தேசிய ஒற்றுமை இல்லாமல் நாம் முன்னேற முடியாது. சிங்களம் மட்டும், முஸ்லிம் மட்டும் என்றால் இந்த நாடு முன்னேற இய லாது” என்று தெளிவுபடுத்தினார். தமிழ் மக்கள் குறித்து பெருமிதத்துடன் பேசிய ஜனாதிபதி, “கடந்த பொதுத் தேர்தலில் என்ன நடந்தது? சில நேரங்களில் நாம் நினைக்க லாம் சிங்களவர்கள், எங்களுக்கு பின்னால் உள்ளனர் என்று. ஆனால் மக்கள் முன்னால் செல்கிறார்கள். வடக்கு மக்கள், கிழக்கு மக் கள் தேசிய மக்கள் சக்தி மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் சிங்கள வரை விட தங்களின் முன்னேறிய அடியை எடுத்து வைத்தனர்” என்று தமிழ் மக்களைப் பாராட்டினார்.
அனைத்து உரிமைகளும் உத்தரவாதம் செய்யப்படும்
திறந்த மனதுடன் கடந்த காலத்தை மதிப் பாய்வு செய்த திஸாநாயக்க, “இதுவரை நாங் கள் வடக்குடன் குறைவாகவே அரசியல் செய் துள்ளோம். கிழக்குடன் குறைவாகவே அரசி யல் செய்துள்ளோம். எங்கள் தொடர்பு முக்கிய மாக சிங்களவர்களுடன்தான். நாங்கள் தமிழில் மிகக் குறைவாகவே தொடர்பு கொள்கிறோம்” என்று ஒப்புக்கொண்டார். தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து வலு வான உறுதிமொழி அளித்த அவர், “எங்கள் மக்கள் எங்களை எப்போதும் கைவிடமாட்டார் கள். அவர்களின் அரசியல் உரிமைகள், வர லாற்று உரிமைகள், கலாச்சார மற்றும் வர லாற்று பாரம்பரியம், மொழி உரிமைகள், பாரம் பரிய நில உரிமைகள், சுதந்திரமாக வாழும் உரி மைகள், இந்த நாட்டின் குடிமக்களாக வாழ்வ தற்கான அடிப்படை உரிமைகள் அனைத்தை யும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டா வது முக்கிய தூண்” என்று அறிவித்தார்.
நாட்டின் அடித்தளம் - நான்கு முக்கிய தூண்கள்
“1. ஊழலற்ற ஆட்சி: “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் ஊழலற்ற அரசியல் பிறந்துள்ளது. மக்களின் ஒரு ரூபாயைக்கூட திருடாத, வீணாக்காத அரசியல்.” 2. தேசிய ஒற்றுமை: தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல். 3. வலுவான அரச சேவை: “3000 புதிய நியம னங்கள், அடிப்படை சம்பளத்தில் கணிச மான உயர்வு.” 4. சட்டத்தின் ஆட்சி: “முன்பு மேலே உள்ள வர்களுக்கு சட்டம் இல்லாத நாடாக இருந் தது. இன்று அனைவருக்கும் சட்டம் சம மாக செயல்படுகிறது.
பொருளாதார மீட்சிக்கான வரைபடம்
கசப்பான யதார்த்தம் நம் முன் உள்ளது. அடிவரை வீழ்ச்சியடைந்த பொருளாதாரம். ஆனால், இதை நாங்கள் திட்டமிட்ட முறை யில் மாற்றுவோம்” என்ற ஜனாதிபதி திஸா நாயக்க, பல்வேறு துறை சார்ந்த மீட்சித் திட்டங் களை அறிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
“கொழும்பு நகரில் காலி நிலங்கள் அனைத் தும் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். விவ சாய மறுமலர்ச்சிக்காக உர மானியம் அதி கரிப்பு, தரமான விதைகள், நிலையான விலை உறுதி செய்யப்படும். மீனவர் நலனைக் கருத் தில் கொண்டு, எல்லையற்ற கடலை கடந்து மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு முழு ஆதரவு அளிக் கப்படும்” என்றார். “ஜப்பான், சீனா, இந்தியா நிறுத்தி வைத்தி ருந்த திட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளன. சர்வதேச அரங்கில் இலங்கை நேராக நின்று, நமது இறையாண்மையை முன்னிலைப்படுத்தி செயல்படும் நாடாக மாறியுள்ளது” என்றார். உள்ளாட்சி தேர்தல் -அடுத்த இலக்கு மே மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர் தல்களின் முக்கியத்துவத்தை விளக்கிய ஜனாதிபதி, “ஜனாதிபதி பதவி, அமைச்ச ரவை, நாடாளுமன்றம், பிரதேச சபைகள் அனைத்தும் ஒரே திசையில் செல்ல வேண்டும். அரசின் பணத்தை திருடாத, வீணாக்காத, வேலைசெய்யும் பிரதேச சபைகள் தேவை” என்று வலியுறுத்தினார்.
ஒன்றிணைவோம்; முன்னேறுவோம்! “
சமத்துவம், நீதி, சமூக அனுதாபம், பரஸ்பர மரியாதை, பொருளாதார செழிப்பு, தூய்மை யான அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - இவை அனைத்தையும் கொண்ட சமூகத்தை உரு வாக்குவோம்” என்று அறிவித்தார். “வெளியே இருப்பது அரசியலற்ற கூட்டம். அரசியல் இருப்பது எங்களிடம். சவால் இருப் பது எங்களிடமே. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை கைவிட எங்களுக்கு எந்த நியாயமான உரிமையும் இல்லை. சமூக நீதி, சமூக சமத்துவம் நிலை நாட்டப்பட்ட அரசை நமது தலைமுறை எதிர்கால தலைமுறைக்காக உருவாக்குவோம். அதற் காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம், முன் னேறுவோம். வெற்றி நிச்சயம்!” என்று திஸா நாயக்க தமது உரையை நிறைவு செய்தார். இந்த மே தின உரை, இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமை யும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரி விக்கின்றனர். குறிப்பாக, தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்திய முதல் சிங்களத் தலைவர் என்ற பெருமையை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பெற் றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎம் சார்பில் வாழ்த்து!
கொழும்பு காலிமுகத்திடலில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி - JVP) சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை கவுரவித்து வாழ்த்துகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய செயலாளருமான ஏ.ஆர். சிந்து.