ஈரோடு,மார்ச் 10- டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்று கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆஜாரான வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வழக்கறிஞர் ப.பா மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்கருக்கும், பெரியா ருக்கும், சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றி. இந்த வழக்கில் கிடைத்த வெற்றி என்னை போன்ற வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மனிதருக்கு சமநீதி உருவாக்க வேண்டும் என்பதில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும். காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை வெளிக்கொண்டு வருவோம். கொடுக்கப் பட்டுள்ள தீர்ப்பு மாறாமல் விடுதலையான 5 பேரின் மீதும், சித்ரா சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.