tamilnadu

img

துணிந்து நின்றோம்! உரிமை வென்றோம் !!

சென்னை யமஹா தொழிலாளர்களது போராட் டம் உலக கவனத்தை ஈர்த்தது என்றால் அங்குள்ள தொழிலாளர்கள் இரவு, பகல், மழை, வெயில் என பாராமல் பத்து நாட்கள் உறுதி யாக நடத்திய உள்ளிருப்புப் போராட்டம்தான் அடிப்படை ஆதாரம். அப்போராட்டத்துக்கு தலைமை வகித்த இந்திய  யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.தமிழ் அழகன் (29) கன்னியாகுமரி சிஐடியு மாநில மாநாட்டில் பிரதிநிதி. அவர் தனது போராட்ட அனுப வத்தை தீக்கதிருடன் பகிர்ந்து கொண்டார். யமஹா நிறுவனத்தில் பெரும்பான்மையான 540 தொழிலாளர்களை பழிவாங்க போட்டி சங்கத்தை வைத்து ஊதிய ஒப்பந்தம் போட முயன்றபோது துணிச்ச லாக உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கினோம். பெரும்பாலான தொழிலாளர்கள் திருமணமாகி தலைத் தீபாவளி கொண்டாடும் நிலையில் இருந்தனர். மனைவிய ரில் பலர் கர்ப்பிணிகள். செண்டிமெண்டாக எங்கள் குடும்பத்தை போராட்டத்துக்கு எதிராக திருப்பலாம் என நிர்வாகம் கருதியது. ஆனால், இது எங்களுக்கு கறுப்பு தீபாவளி என்றும், போராட்டத்தின் வெற்றிதான் உண் மையான தீபாவளி எனவும் குடும்பத்தினருக்கு அனுப்பிய செய்தி பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. மறுபுறம் எங்களை காவல்காத்து நின்ற ஒப்பந்த காவலாளிகள் மட்டுமல்ல நிர்வாக தரப்பினரும் போராட்டக் களத்திலிருந்து காணாமல் போனார்கள். இது நிர்வாகத்துக்கு பெரும் ஏமாற்றமளித்தது.  மாற்றுத்துணி கூட கிடைக்காத நிலையில் போராட்டத்தை தொடர்ந் தோம். ஒரு பற்பசையும் துண்டும் கொண்டு வந்து தர முயன்ற பயிற்சி தொழிலாளி ஒருவர் பழிவாங்கப் பட்டார். போராட்டத்தை துணிச்சலாகத் தொடர்ந்தது எங்க ளுக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. சிஐடியுவும் தமிழக தொழிலாளி வர்க்கமும் மேற்கொண்ட ஆதரவு இயக்கங் கள் எங்கள் போராட்டத்துக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது என்றார்.

கொரோனா காலத்தில் வட மாநில  தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள திராணியற்ற மத்திய ஆட்சியாளர்கள் திடீரென அறிவித்த முழு முடக்கம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது. தொழில் நகரான ஓசூர் ஒரு குட்டி இந்தியா. அனைத்து மாநிலங்களில் இருந்தும் புலம் பெயர்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு உள்ளனர். முழு முடக்க அறிவிப்பு அவர்களை நிலைகுலைய வைத்தது. அடுத்த வேளைக்கு உணவில்லை என திகைத்து நின்ற அவர்க ளை வீடு வீடாகச் சென்று உயிரை துச்சமென கருதி சந்தித்தது ஒரு இளம் தொழிலாளர் படை, வெளிமாநிலத் தவர்களை மாநில வாரியாக கணக்கெடுத்து வாட்சாப் குழுக்களை உருவாக்கி தகவல் சேகரித்து உடனடியாக உணவுப் பொட்டலங்கள், சமைக்க தேவையான அரிசி,  கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த பணி அரசின் உதவிகளை பெற்றுத்தரும் செயல்பாட்டுக் குழுவாக விரிவடைந்தது. இதில் முன்னணி பங்கு வகித்த ஓர் அசோக் லேண்ட் தொழிலாளி ஜி.ஸ்ரீதரன் சிஐடியு மாநில மாநாட்டு பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளரான இவர் தனது அனுபவத்தை கூறுகிறார்.  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரம் அரசின் எந்த துறையிடமிருந்தும் கிடைக்காத தால் நாங்களே நேரடியாக களமிறங்கினோம். குடியிருப்பு களுக்கு முதலில் நேரடியாகச் சென்று கணக்கெடுத்து வைத்திருந்த விவரங்கள் அடிப்படையில் அரசின் உதவிகளை பெற்றுத் தந்தோம்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் உட்பட 125 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திரிபுரா மாநி லக்குழு உறுப்பினர் அச்சிந்தியா தேப்ராஜ் என்பவர் தகவல் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று அவர்களுக்கு சென்னை வரை செல்ல 2 பேருந்துக ளை ஏற்பாடு செய்து கொடுத்து அங்கிருந்து ரயிலில் திரிபுரா செல்ல ஏற்பாடு செய்தோம். அஸ்ஸாம்,மேற்கு வங்கம், ஒடிசா, உ.பி. பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு செல்ல சுமார் 700 பேரை ரயில் மூலம் அனுப்பினோம். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் இருந்து கெல மங்கலம் அருகில் ஒரு உள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் வெளியேற்றப் பட்டனர். சுமார் 10 கிலோ மீட்டர் கால்நடையாக ஓசூர் ரயில் நிலையம் வந்த அவர்களுக்கு  போக்குவரத்து செலவுடன் சம்பளத்தில் ஒரு பகுதியை பெற்றுத்தந்து உதவினோம். இதுபோல் பேரிகையில் நர்சரி தோட்டத் தில் பணியாற்றிய 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் சம்பள மின்றி வெளியேற்றப்பட்டபோது தலையிட்டு உதவினோம். நாங்கள் செய்த பணிகளை கேட்டறிந்த பெங்களூர் சிஐடியு  தோழர்கள் பெரிய அளவில் அங்குள்ள தமிழர்கள் உட்பட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவினார்கள் என்றார்.  

மீன்பிடி தொழிலில்  சட்டக்கல்லூரி மாணவி

தமிழகத்தில் பாரம்பரியமான தொழில்களில் ஒன்று  மீன்பிடித்தல். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த துறையில் இளம் தொழிலாளியான 20 வயது வில்லியம் ஜாய்ஸி ஈடுபட்டு வருகிறார். ராமேஸ் வரம் அருகே உள்ள அரியாங்குண்டைச் சேர்ந்த பட்டதாரி யான இவர் சட்டப்படிப்பை தொடர உள்ளார். சிஐடியு மாநாட்டு பிரதிநிதியாக கலந்துகொண்டார். கடலில் மீன் பிடிக்க நாட்டுப்படகில் தந்தை வில்லியத்துடன் செல்லும் இவர்,  தனது அனுபவத்தை கூறுகையில், எனது அம்மா செங்கோல் ராணியும், அப்பாவும்கூட  சிஐடியு மீன்பிடி சங்க உறுப்பினர்கள். நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கும் 5 நாட்டிக்கல் மைலுக்குள் விசைப்படகு மீன்பிடித்தல் கூடாது. ஆனால் அவர்கள் அதை மீறி அரை நாட்டிக்கல் தூரத்துக்குள் மீன் பிடிக்கி றார்கள். பல நேரங்களில் எங்களது படகில் மோதி விபத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் எங்களுக்கு அச்சுறுத்தலும் வாழ்வாதாரப் பாதிப்பும் ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் மீன்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடல்பாசி தயாரிப்பில் ஈடுபடுகிறோம். அரசும் அதை ஊக்குவிக்கிறது. முன்பு கடல்பாசியை பெப்சி நிறுவனம் கொள்முதல் செய்தது. இப்போது வேறு நிறுவனம் வாங்கிச் செல்கிறது. ஆனால், எங்களுக்கு குறைந்த வருவாய்தான் கிடைக்கிறது. சிஐடியு மீன் சங்கம் எங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், உரிமைகளுக்காக வும் எங்களுடன் துணை நின்று போராடுகிறது என்றார்.    

எதிரிகளின் தாக்குதலை  சந்தித்து மீண்டவர்

கடந்த 2 ஆண்டுகளாக தொடர் சிகிச்சையில் இருப்ப வர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சகாய ஆன்றனி (49). திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்த இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். கட்டுமான தொழிலாளர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பு கையில் மறைந்திருந்த எதிரிகள் தாக்கியதில் உயிர் அபாயம் ஏற்படும் அளவுக்கு படுகாயம் அடைந்தார். சுமார் ஓராண்டுகால சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்த வர் தற்போது சிஐடியுவிலும் கட்டுமான தொழிலாளர் சங்கத்திலும் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். சிஐடியு மாநில மாநாட்டு பிரதிநிதியாக கலந்து கொண்ட அவர் கூறுகையில், கட்டுமான சங்கம் குமரி மாவட்டத்தில் ஒரு வலுவான அமைப்பு. இதில் பணி யாற்றும் ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. மருத்துவ சிகிச்சை தொடரும் நிலை யிலும் சங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

வகுப்புவாத சக்திகளிடமிருந்து  ஆலயங்களை மீட்போம்!

கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அஜிகுமார் சிஐடியு மாநில மாநாட்டு பிரதிநிதியாக பங்கேற்றார். அவர் கூறு கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலயங்களை தளமாக கொண்டு வகுப்புவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நடவ டிக்கை அதற்கு உதவும் வகையில் உள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் 1036 திருக்கோயில் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் ஆலய பாது காப்பு அமைப்புகள் என்கிற பெயரில் வகுப்புவாதப் பின்னணி கொண்ட வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 400 ஊழியர்கள் மட்டுமே உள்ள நிலையில் நிர்வாக ஊழியர்கள் வெளி ஆட்கள் உதவியுடன் முறைகேடு களில் ஈடுபடுகிறார்கள். ஆலயச் சொத்துகள் சூறையாடப் படுகின்றன. இவற்றை தடுக்க காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாந்தி என்கிற பூசாரி, காவலர், வாத்தி யம், துப்புரவு என உள்ள பணியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகி றது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களது உரிமை களுக்காக களத்திலும் நீதிமன்றத்திலும் சிஐடியு போராடுகிறது என்றார்.