tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்

திருவாரூர், மார்ச் 8- தமிழக அரசு மகளிர் தினத்தையொட்டி மகளிர் நலன் சார்ந்த கொள்கைகளை வெளி யிட்டுள்ளது. இதில் ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வரும் அறிவிப்புகள் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே  இதற்கான சட்டத்தை உடனே கொண்டு வர வேண்டுமென சர்வதேச மகளிர் தின விழாவில் மாதர் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  திருவாரூரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.சுமதி தலைமை யில் நடைபெற்ற கருத்தரங்கில் சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் பேசிய தாவது: மகளிர் தினம் என்பது சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுவதற்கு பின்னால் ஏராள மான தியாகங்கள் அடங்கியுள்ளன.

தியாகத்தால் வரலாறு முழுவதும் நிரம்பி இருக்கும் மகளிர் தலைவர்கள் காரணமாக விளங்குகிறார்கள். தற்போது நாம் அனு பவித்து வரும் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் இவர்களால் கிடைத்ததுதான்.  இன்றைய வாழ்க்கை முறை கார்ப்பரேட்டுகளால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களை அலங்கார பதுமை களாக, அழகு சாதன பொருட்களாக கருதி  மார்கெட்டில் பல பொருட்களைவிற்கிறார்கள். இதற்காக பெண்களையே மாடல்களாக பயன்படுத்துகிறார்கள். பெண்களிடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டுமோ என்ற  மாயையையும் ஏக்கத்தையும் உருவாக்கு கிறார்கள்.  ஆனால் பெண்களின் அடையாளம் என்பது  நமது நாட்டில் வறுமையும் வன்முறையும்தான் என்ற உண்மையை உணர்ந்து சமுதாய மாற்றத்திற்காக பெண்கள் கிளர்ந்தெழுந்து விடக்கூடாது என்பதற்காக இந்த பெருமுத லாளிகள் திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள்.

இந்த நாட்டின் அரசியலும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது.  நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி  வருகிறோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதற்கு ஓரளவு இசைவு தந்திருந்தாலும், தற்போது மத்தியில் உள்ள மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு பெண்களுக்கு சம உரிமை அளிக்க மிகவும் தயங்குவதற்கு காரணம் அவர்களின் பெண்ணடிமைத்தன சித்தாந்தமே.  பெண்கள் மீது பல்வேறு வகையான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்றைய நவீன வாழ்க்கை சூழலிலும்கூட பெண்ணடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையத்தின் புள்ளி விவ ரங்கள் இதனை உணர்த்துகிறது. சமீபத்தில் மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு முழக்கத்தை முன்வைத்துள்ள னர். பெண்கள் எவரையும் சார்ந்து இருக்கும்  நிலையை உடைத்தெறிவது என்ற பொருள் படும்படி முழக்கம் எழுந்துள்ளது.  உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்கப்பட்டு ஏராளமான பெண்கள் மேயர்களாகவும், நகர்மன்ற, பேரூ ராட்சி தலைவர்களாகவும், ஊராட்சிமன்ற தலை வர்களாகவும் சிறப்பாக பணியாற்றி வரு கின்றனர். இத்தகைய தலைவர்களை மேலும் சிறந்த தலைவர்களாக வளர்த்தெடுப்பது ஜன நாயக மாதர் சங்கத்தின் கடமை. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற அனைத்து வன்முறைக்கு எதிராகவும், பெண்களின் வறுமை நிலையை  நீக்குவதற்கும், பெண்களின் சுயமரியாதையை பாதுகாக்கும் வகையிலும், கல்விநிலையங் களில் ஆண், பெண், குழந்தைகளின்  சமத்து வம் குறித்தும், குறிப்பாக பெண் குழந்தை களை எப்படி அணுக வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டும் மாதர் சங்கம் பெண்கள் முன்னேற்றத்திற்கான தங்களின் போராட்டத்தை தொடர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.  இக்கருத்தரங்கில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் இரா.மாலதி, சங்க மாவட்ட செயலாளர் பா.கோமதி, சிஐடியு மாவட்ட செய லாளர்  டி.முருகையன், மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.வைத்தியநாதன், ஊராட்சிமன்ற தலைவர் கே.செங்கொடி மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மகளிர் தின விழாவின் போது ஆளுமை மிக்க சங்க நிர்வாகிகளுக்கும், உள்ளாட்சி  அமைப்புகளின் ஊராட்சி மன்ற தலைவர் களாகவும், வார்டு உறுப்பினர்களாகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பணியாற்றி வரும் பெண்களுக்கும் கூட்டத்தில் சிறப்பு செய்யப்பட்டது.