பாலஸ்தீன மக்கள் மீது அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் இனப் படுகொலை யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை பெரம்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.