tamilnadu

img

தொழில் துறையில் வேகமாக முன்னேறி வருகிறோம்: முதல்வர்

சென்னை,ஏப்.19- தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல் தமிழகத்தின் முழுமைக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று(ஏப்.19) தொழில் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி,“தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன” என்று கேள்வி எழுப்பியதுடன் அதிமுக ஆட்சியின்போது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொழில் துறையை பொறுத்த வரை தமிழ்நாடு மிக வேகமாக  முன்னேறி வந்து கொண்டிருக்கி றது.

அதில் எந்த மாற்றமும் கிடை யாது. இந்த அரசு பொறுப் பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய  முதலீடுகளை பெற புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கி றது” என்றார். திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்து இருக்கி றோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  போடுவது மட்டும் முக்கியமல்ல. இதில் உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளை கொண்டு வருவது தான் மிக மிக முக்கியம் என்றும்  அந்த வகையில் இந்த 10  மாதங்களில் புதிய முதலீடுகள்  வந்திருக்கிறது.

புதிய தொழிற் சாலைகள் தொடங்கப் பட்டிருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் முதல மைச்சர் கூறினார். தொழில் வளர்ச்சியின் பயன்  குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே  சென்றடையாமல் தமிழகத்தின் முழுமைக்கும் அது சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அன்னிய நேரடி முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு உள்ளன. தமிழ கத்தை தொழில்துறை மாநில மாக உருவாக்குவதன் மூலம்  தமிழகத்தின் தொழில் முதலீடு களை பத்திரிகைகள் பாராட்டி யுள்ளன.  சட்டம் ஒழுங்கு பிரச் சனை வராமல் இருக்க வேண்டு மானால் தொழில் வளர்ச்சி மிக வும் தேவையாகும். அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.