திருவனந்தபுரம், ஜுலை 18- நீர் ஆதாரங்களை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் ‘இனி நான் பாயட்டுமா’ திட்டத்தின் மூலம் 45,736 கி.மீ நீர் வழித்தடங்களை கேரளா மீட்டெடுத்துள் ளது. 412 கி.மீ இயல்பான நதி ஓட்டமும் மீட்டெடுக் கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன், ஓடை கள், வாய்க்கால் போன்றவற்றில் தேங்கிய கழிவுகளை அகற்றி, இயல்பான நீரோட்டம் செல்லும் வகையில், நீர் ஆதாரம் மீட்கப்பட்டது. திருவனந்தபுரம் மாவட் டத்தில் 10,885 கி.மீ மிக நீண்ட தூரத்துக்கு கழிவு கள் சுத்திகரிக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத் தில் 7101 கி.மீ, கோட்டயம் மாவட்டத்தில் 4148 கி.மீ தூரம் சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அடிப்படையில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான சிறப்பு முயற்சியாக ‘இனி நான் பாயட்டுமா’ (இனி ஞானொழுகட்டே) என்கிற பிரச்சாரம் தொடங்கப்பட்டது. வரட்டாறு நதி மறு சீரமைப்பு, கானாம்புழா, கிள்ளியாறு, சாலம்கோட் ஓடை, பூனூர் ஆறு மற்றும் பிற மாசுபட்ட நீர்நிலைகள் போன்றவை ஹரித கேரளா மிஷனின் பகுதியாக சுத்தம் செய்யப்பட்டன. இது நீர் ஓட்டத்தை சாத்தியமாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. மீனசிலாறு, மீனந்த ரயார், கொட்டூராறு ஆகிய பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைத்ததன் மூலம் 5,200 ஏக்கருக்கு மேல் மீண்டும் சாகுபடி செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது. கால்வாய்கள் செல்லும் வார்டுகளில் சிறப்புக் குழு அமைத்து பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. திட்டத்தின் ஒரு பகுதியாக, மீண்டும் மாசுபடுவதைத் தடுக்க தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.