மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர்
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சேலம், ஜூன் 12 - குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வியாழ னன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொத்தானை அழுத்தி அணையின் எட்டு கண் மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்து வைத்ததுடன், ஆர்ப்பரித்து வெளியேறிய தண்ணீரில் மலர்களைத் தூவி மகிழ்ச்சி யைப் பகிர்ந்து கொண்டார். மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-ஆவது முறையாகும். தற்போது, மேட்டூா் அணையிலிருந்து, ஜூன் 12 முதல் செப்டம்பர் 15 வரை தொடர்ந்து தண்ணீர் திறக்க ப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் அனை வரும் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்தவும், நீர்பங்கீட்டில் நிலைமை கேற்ப தண்ணீரை முறை வைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர் களுடன் ஒத்துழைக்கு மாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையு மாறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயப் பெரு மக்களை கேட்டுக்கொண்டார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி விகிதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் படிப்படியாக இர வுக்கு விநாடிக்கு 10,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது
. 460 மெகாவாட் மின் உற்பத்தி
அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற் பத்தியும் நடைபெறஉள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கள் க. துரைமுருகன், எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ரா. ராஜேந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.மதிவேந்தன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி (சேலம்), மலையரசன் (கள்ளக்குறிச்சி), ஆ. மணி (தருமபுரி), மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், சேலம் மேயர் ஆ. ராமச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு
விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலை உயர்த்தப் படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, சாதாரண ரக நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,548-ம் வழங்கப்படும். இதனால் 10 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.