சென்னை,பிப்.17- ஓட்டுப்பதிவு நாளான 19 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு ரூ.500 வரையில் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19 ஆம் தேதி கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறு வனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு ரூ.500 வரையில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்கள், தினக்கூலி, தற்கா லிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்க ளிக்க ஏதுவாக விடுமுறை அளித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற உரிய ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து வடசென்னை தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி (98416 59678), தென்சென்னை தொழிலாளர் உதவி ஆணை யர் சுபாஷ் சந்திரன் (90032 59303), மத்திய சென்னை தொழிலாளர் உதவி ஆணையர் ரேவதி (98402 49504) ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.