மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக 400 கி.மீ., நடைபயண இயக்கம் நடைபெற்றது. அதன் நிறைவாக மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., கே.சாமுவேல் ராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.