tamilnadu

img

“நடப்போம் நலம் பெறுவோம்’’ திட்டம் தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைபயிற்சி முன்னாள் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

“நடப்போம் நலம் பெறுவோம்’’ திட்டம்  தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைபயிற்சி முன்னாள் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூா், அக். 6- தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தொடங்கப்பட்ட, “நடப்போம் நலம்பெறுவோம்’’ என்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை மாதந்தோறும் முதல் ஞாயிறன்று, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, ஞாயிறன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கத்தினர், மாநகர சுகாதாரத் துறையுடன் இணைந்து, 15 ஆவது மாதமாக 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடைபயிற்சியை மேற்கொண்டனர்.  சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையில், தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன் கொடியசைத்து தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.   இந்த நடைபயிற்சியில், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர்  உள்ளிட்ட  200-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்று, புதிய பேருந்து நிலையம் வரை  சென்று, மீண்டும் அதே வழியாக  அன்னை சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தனர். நடைபயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டியா வழங்கப்பட்டது. இளங்கோவன் நன்றி கூறினார்.