tamilnadu

img

34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை

தூத்துக்குடி,ஏப்.3-  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2021-22 நிதி யாண்டில் 34.12 மில்லியன் டன் சரக்கு களையும், 7.81 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டுள்ளது

1. கையாளப்பட்ட சரக்குகளின் செயல்திறன்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கடந்த நிதி யாண்டு 2021-22-ல் 34.12 மில்லி யன் டன் சரக்குகளை கையாண்டுள் ளது. 2020-21 நிதியாண்டில் கையா ளப்பட்ட 31.79 மில்லியன் டன் சரக்கு களை விட 7.33 சதவிகிதம் விழுக்காடு கூடுதலாகும். இறக்குமதியை பொருத்தவரையில் 24.19 மில்லியன் டன்களும் (+7.42%), ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.45 மில்லியன் டன்களும் (+2.83%) சதவிகிதமும் மற்றும் சரக்குபரிமாற்றம் 0.48  மில்லியன் டன்களையும் கையாண்டுள் ளது. இந்திய அரசின் மத்திய துறை முகங்கள், கப்பல் மற்றும் நீர்போக்குவரத்து துறை அமைச்சகம் 2021-22 நிதியாண்டிற்காக நிர்ணயம் செய்த 34.00 மில்லியன் டன் சரக்குகளை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 30.03.2022 அன்று கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் துறைமுகம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் 2021-22 நிதியாண்டில் 7.81 இலட்சம் டி.இ.யுக்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 7.62 டி.இ.யுக்களை ஒப்பிடுகையில் 2.49 % கூடுதலாகும். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு கையாளும் செயல்திறனை பொருத்தவரையில், கப்பல்கள் தளத்திற்காக காத்திருக்கும் சராசரி நேரமானது 2021-22 நிதியாண்டில் 11.52 மணி நேரமாகும் (2020-21 நிதியாண்டு 13.44 மணி நேரம்). கப்பல் தளத்தில் கப்பலின் சராசரி உற்பத்தி குறியீடானது 2021-22 நிதி யாண்டு 16,811 டன்களாக அதி கரித்துள்ளது (2020-21 நிதியாண்டு 15,696 டன்கள்).

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டில் காற்றாலை, காற்றாலை உதிரிபாகங்கள் மற்றும் பொது சரக்குகளையும் கையாண்டு பல்வேறு சாதனைகளை படைத்தது. குறிப்பாக 81.50 மீட்டர் நீளமுடைய மிகபெரிய காற்றாலை இறகு களை  கையாண்டுள்ளது. 24 மணி நேரத்தில் 57,090 டன்கள் நிலக்கரியை யும், 53,604 டன்கள் சுண்ணாம்புக் கற்களையும் கையாண்டுள்ளது. 93,719 டன்களுடன் கூடிய அதிக பொது சரக்குகளை கொண்ட பெரிய கப்பலை கையாண்டுள்ளது மற்றும் முக்கிய வழித்தடத்தில் பயணிக்க கூடிய 277 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய சரக்குபெட்டக கப்பலை கையாண்டுள்ளது.

2. நிதிநிலை செயல்பாடு (உத்தேசம்)

வ.உ.சிதம்பரனார் துறை முகத்தில் 2021-22 நிதியாண்டு மொத்த  வருவாய் ரூபாய் 636.29 கோடி (2020-21 நிதியாண்டு ரூபாய் 603.21 கோடி) ஆகும். 2021-22 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 340.90 கோடி (2020-21 நிதியாண்டு ரூபாய் 321.62 கோடி) ஆகும். 2021-22 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 130.01 கோடி (2020-21 நிதி யாண்டு ரூபாய் 109.53 கோடி) ஆகும்.

3. திட்டங்கள்

வ.உ.சிதம்பரனார் துறை முகத்தில் கடந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்களான சரக்கு பெட்டக கண்காணிக்கும் அமைப்பு ரூ.42 கோடி செலவிலும், 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை சூரியமின் சக்தி ஆலை  ரூ.54 இலட்சம் செலவிலும் மற்றும் மின்சாரத்தால் இயங்க கூடிய 6  இ-கார்கள் (ஒப்பந்த அடிப்படை யில்) ரூ.2.22 கோடி செலவிலும் வாங்கப்பட்டு துறைமுக பயன் பாட்டிற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடலோர வேலைவாய்ப்பு அபி விருத்தி திட்டத்திற்காக உணவு, மாட்டு தீவனம், கனிமங்கள், சமை யல் எண்ணெய், தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்கு துவங்கு வதற்காக சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பி னை ஒதுக்கியுள்ளது. மேலும் கூடுதலாக சிமெண்ட் கையாளும் முனையம் அமைப்பதற்காக 12.79 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கியுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறை முகத்தில் கப்பல் வந்து செல்லும்  நுழைவு வாயிலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், கரி சேமிப்பு கிடங்கில் அமையப்பெற்று இருக்கும் சாலையினை மேம்படுத்து தல், பொது சரக்குகளை கையாளு வதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் - 3 இயந்திரமயமாக்கல், பொது சரக்குகளை கையாளும் சரக்கு தளம் 9-யினை சரக்குபெட்டக முனையமாக மாற்றுதல், 2.8 மெகாவாட் காற்றாலை மற்றும் 5 மெகாவாட் தரைதள சூரியமின் ஆலை நிறுவுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் கூடுதலாக வெளி துறைமுக திட்டத்தின் முதற்கட்ட மாக 16மீட்டர் மிதவை ஆழத்துடன் கூடிய இரண்டு சரக்குபெட்டக முனை யங்களும் (1000 மீட்டர் நீளத்துடன் கூடிய தளங்கள்) மற்றும் 100 மெகாவாட் திறன் கொண்ட (புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி) காற்றாலை - சூரிய மின் ஆலை  அமைவதற்கு அனைத்து வசதிகளு டன் கூடிய பூங்காவும் பொது தனி யார் கூட்டமைப்புகீழ் அமைக்கப்பட உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு  கையாளும் அளவு கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்டு இருந்த வர்த்தக வீழ்ச்சி தற்போது சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது என்று கூறினார். மேலும் இச்சிறப்புமிக்க சாதனையை புரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறை முக அதிகாரிகள், ஊழியர்கள், துறை முக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டகங்க முனையங்கள், துறை முக உபயோகிப்பாளர்கள் மற்றும்  அயராது உழைக்கும் தொழி லாளர்களுக்கு தனது நன்றி யினை தெரிவித்துகொண்டார். வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணை யம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.