tamilnadu

பொது வேலை நிறுத்தத்தில் தொழிற்பயிற்சி அலுவலர்கள் பங்கேற்பு

சென்னை, மார்ச் 24- ஒன்றிய அரசு கடைபிடித்துவரும் தனியார்மய , தாராளமய கொள்கையை எதிர்த்து  மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடை பெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத் தில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம்  பங்கேற்க உள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.சீனிவாசன், பொதுச்செயலாளர் என்.ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் தவறான பொருளா தார கொள்கையால்  நாட்டில் அனைத்து  தரப்பு மக்களும் தங்களது வாழ்வா தாரத்தை இழந்து கடுமையான பாதிப்புக் குள்ளாகியுள்ளார்கள்.  புதிய பென்சன் திட்டம்  என்பது ஊழியர்களிடமிருந்து ஊதியத்தை பிடித்தம் செய்யும் திட்டமாக மட்டுமே இருந்து  வருகிறது, இதனால் பணி ஓய்வு பெறும் அரசு  ஊழியர்கள் எவ்வித பணப்பலனும் இன்றி  வாழ்க்கையின் அந்திம காலத்தில் ஆதரவின்றி நிர்கதியற்ற வாழ்க்கையை வாழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத்தால்  படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும்  கூடுதல் பணிகள் மூலம் கடுமையான வேலை ப்பளு ஊழியர்கள் மீது திணிக்கப்படுகிறது. எனவே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தேசம் முழுவதும் வங்கி,  இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, ஒன்றிய, மாநில பொதுத்துறை ஊழியர்கள் அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற் கும் வேலைநிறுத்தத்தில்  தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் அனைத்து ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.