tamilnadu

விருதுநகர் சந்தை துவரம் பருப்பு, உருட்டு உளுந்து விலை உயர்வு பாசிப் பருப்பு, பாசிப் பயறு விலை குறைவு

விருதுநகர் சந்தை துவரம் பருப்பு, உருட்டு உளுந்து விலை உயர்வு பாசிப் பருப்பு, பாசிப் பயறு விலை குறைவு

விருதுநகர், அக்.5- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. பாசிப்பருப்பு மற்றும்  பாசிப் பயறு, பட்டாணி பருப்பு ஆகிய வற்றின் விலை குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: துவரம் பருப்பு 100 கிலோ புதுசு நாடு  வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ. 9,800 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்  பனை செய்யப்பட்டது. இந்த வாரம்  மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்துள் ளது. எனவே, ரூ.9,900 முதல் ரூ.10,100 வரை விற்கப்படுகிறது. இதேபோல், துவரம் பருப்பு நயம்  ரூ.9,700 முதல் ரூ.9,800 வரை விற்பனை யானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 உயர்ந்தது. எனவே, மூட்டை ஒன்று ரூ.9,800 முதல் ரூ.9,900 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு  வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 10,200க்கு விற்கப்பட்டது. இந்த வாரம்  மூட்டைக்கு 100 உயர்ந்துள்ளது. எனவே, ரூ.10,300க்கு விற்பனை யாகிறது. இதேபோல் உருட்டு உளுந்தம் பருப்பு எப்.ஏ.க்யூ வகை கடந்த வாரம்  ரூ.9,250க்கு விற்பனையானது. இந்த  வாரம் மூட்டைக்கு ரூ.200 உயர்ந்துள் ளது. எனவே, ரூ.9,450க்கு விற்கப்படு கிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.9,400 முதல் ரூ.9,500 வரை விற்ற நிலையில், இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.9,300 முதல் ரூ.9,400 வரை  விற்பனை செய்யப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ  கடந்த வாரம் ரூ. 4,200 என விற்கப் பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100  உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.4,300க்கு விற்பனையாகிறது. பட்டாணி பருப்பு இந்தியா வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.4,100 முதல் ரூ.4,200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 குறைவு  ஏற்பட்டதால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,100  வரை விற்பனையாகிறது. பாசிப் பயறு இந்தியா வகை கடந்த  வாரம் 100 கிலோ ரூ.8,800 முதல் ரூ.9,200  வரை விற்கப்பட்டது. இந்த வாரம்  மூட்டைக்கு ரூ.200 வரை குறைந்துள் ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.8,600 முதல் ரூ.8,800 வரை விற்கப்படுகிறது. அதேவேளை, பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.