tamilnadu

img

கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல: சிபிஎம் கருத்து

சென்னை,மார்ச் 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும்  கட்சியின் சார்பில் போட்டி வேட்பா ளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக எதிர் அணியினர் பலன டைந்ததையும் பார்த்தோம். இப்போது, நகர்ப்புற உள்ளாட்சி களின் தலைவர் மற்றும் துணைத் தலை வர்களுக்காக மறைமுக தேர்தல்கள் நடந்துள்ளன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளிடையே பேசி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த  உடன்பாடு பெரும்பாலும் அமலாக வில்லை.  திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன்  

 பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பிலும், இதர கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டி யிட்ட வேட்பாளர்களின் வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு, கூட்டணியில் ஒதுக்கப் பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலை வர் இடங்கள் அனைத்திலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்க மாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு  அனுமதிக்க முடியாததாகும். பதவி வெறியில் சிலர் ஒப்பந்தத்தை காலில்  போட்டு மிதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கி யமான அரசியலின் வெளிப்பாடு அல்ல  என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வே ண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், திமுக  தலைமைக்கு தெரியாமல் இவை  நடந்திருக்குமா என்ற கேள்விக்கு, திமுக தலைமையின் ஒப்புதலோடு நடை பெற்றதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகி கள், திமுக பொறுப்பாளர்கள் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்றார்.