உட்கட்சி ஜனநாயகத்தின் உன்னத அடையாளம் மார்க்சிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளின்படி நாடு முழுவதும் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் கிளை மாநாடுகள் நிறைவுபெற்று, தற்சமயம் மாநகர, நகர, ஒன்றிய, வட்ட, பகுதி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் பங்கேற்று, கடந்த மூன்றாண்டு காலம் கட்சி ஆற்றிய பணிகள், பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் எடுத்த நிலைப்பாடுகள், மக்கள் பிரச்சனைகள், அமைப்பின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தீர்க்கமாக விவாதித்து, அந்தந்த மட்டங்களுக்கான புதிய குழுக்களையும் செயலாளரையும் தேர்வு செய்கிற மிக உயர்ந்த ஜனநாயக செயல்முறையை மேற்கொண்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட மாநாடுகள் நடைபெற உள்ளன. அதன் முத்தாய்ப்பாக ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் 24வது மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெற உள்ளது. அதன் உச்சக்கட்டமாக கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்புக் குழு, மாநாட்டு தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. விழுப்புரம் நகரிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநாட்டிற்காக நிதி திரட்டும் பணியும், மாநாட்டைப் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்லும் விதமாக விளம்பரப் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன. கட்சியின் விழுப்புர மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஒட்டுமொத்த தோழர்களும் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பணிகளில் முழுமையாக களமிறங்கியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் பெருமை மிகு பணிகள் குறித்தும் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்தும் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில் விரிவாக உரையாற்றி இருந்தார். மாநாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவரது உரையின் அம்சங்கள் மேலும் உத்வேகம் அளிக்கின்றன.
1 கட்சி அமைப்பு மற்றும் கட்டமைப்பு'
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் மிகவும் வலுவான அமைப்பு ரீதியான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 42 மாவட்டக் குழுக்கள், 600க்கும் மேற்பட்ட இடைக் குழுக்கள், 12,000க்கும் மேற்பட்ட கிளைகள், 100க்கும் மேற்பட்ட நகர குழுக்கள் உள்ளன. 1,000க்கும் மேற்பட்ட முழு நேர ஊழியர்களும், 90,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். இது ஒரு நபரை நம்பி இயங்கும் கட்சி அல்ல, மாறாக கிளைகள் முதல் மேல்மட்டம் வரை வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
2 தேர்தல் சாதனைகள்; அரசியல் செல்வாக்கு:
2 தேர்தல் சாதனைகள்; அரசியல் செல்வாக்கு: 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற்றது வரலாற்றுச் சாதனை. 2019 தேர்தலை விட வாக்கு சதவீதம் அதிகரித்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இது கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதையும், மாற்று சக்தியாக உருவாகும் அடையாளத்தையும் காட்டுகிறது.
3 கொள்கை நிலைப்பாடு மற்றும் மாற்று அரசியல்:'
நவீன தாராள மயமாக்கல் கொள்கைகளை எதிர்க்கும் ஒரே உண்மையான மாற்று சக்தி இடதுசாரி இயக்கம். மக்களுக்கான மாற்றுக் கொள்கையை முன்வைத்து போராடும் இயக்கம். வேலையின்மை, சிறு குறு தொழில்களின் அழிவு, விவசாய நெருக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கொள்கைகளை முன்வைக்கிறது.
4 சித்தாந்தப் போராட்டம்
தீக்கதிர் பத்திரிக்கையை தொடர்ந்து நடத்தி வருகிறது. பத்திரிக்கையின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதன் மூலமும் மார்க்சிஸ்ட் ஏடு மூலமும் கட்சியின் கொள்கைகள், மாற்று சித்தாந்தங்கள், மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பது பற்றிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.'
5 சமூக நீதிப் போராட்டங்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு
சாதிய அணி திரட்டலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்னிலை வகிக்கிறது. தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, சாதிய வன்முறை போன்ற பிரச்சனைகளில் தீவிரமாக தலையிடுகிறது. வட மாவட்டங்களில் சாதி அடிப்படையிலான பிளவுகளை எதிர்த்து உழைப்பாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்த முயற்சிக்கிறது.
6 தனித்துவம் மற்றும் போராட்ட குணம்
எந்த நேரமும் களத்தில் நின்று போராடும் போராளிகளைக் கொண்ட இயக்கம், மார்க்சிய இயக்கம். பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக சென்று உதவும் பாங்கு. தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்.
7 எதிர்கால இலக்குகள் மற்றும் திட்டங்கள்
7 எதிர்கால இலக்குகள் மற்றும் திட்டங்கள் வடமாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டில் சாதிய சக்திகளை தனிமைப்படுத்தி பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்டமைக்க திட்டமிடுகிறது. புதிய தமிழ்நாட்டை உருவாக்க முயற்சிக்கிறது. மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இளைஞர்கள் மற்றும் மாற்றம் தேடும் மக்களை ஈர்க்க முயற்சிக்கிறது.
8 பல்வேறு மக்கள் பிரிவுகளுடன் தொடர்பு
8 பல்வேறு மக்கள் பிரிவுகளுடன் தொடர்பு மலை மக்கள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரையும் திரட்ட முயற்சிக்கிறது. பல்வேறு சமூகப் பிரிவுகளின் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு போராடுகிறது.
9 விழுப்புரம் மாநில மாநாட்டின் முக்கியத்துவம்
24வது மாநில மாநாட்டை மார்க்சிஸ்ட் கட்சி விழுப்புரத்தில் நடத்துகிறது. இந்த மாநாடு மூலம் கட்சியின் எதிர்கால திசையை வகுக்க திட்டமிடுகிறது. வடமாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்த இந்த மாநாடு உத்வேகம் அளிக்கும்.
சாதிய அணிதிரட்டலை வலுவாக எதிர்ப்போம்! உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவோம்!
தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையே, இந்தியா கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு காரணம்.
• எனினும் பாஜகவின் வாக்கு வங்கி 4.5% இலிருந்து 12% ஆக உயர்ந்துள்ளது.
• பாஜக வெறுப்பு அரசியலை வேகமாக முன்னெடுக்கிறது.
• சாதிய சக்திகளை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது.
• ஆளுநரை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது.
• அதிமுக பலவீனமடைந்து, பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளது.
• அதிமுகவில் பாஜகவுடன் கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகள் உள்ளன.
• அதிமுகவுக்கு வலுவான தலைமை இல்லை.
• திமுக-அதிமுக இருமுனை அரசியல் தளர்வடைந்துள்ளது.
• சீமான், விஜய் போன்றோர் மாற்று அரசியல் என களமிறங்கியுள்ளனர்.
• புதிய முகங்களுக்கு தெளிவான மாற்று கொள்கைகள் இல்லை.
• நவீன தாராளமய கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளன.
• வேலையின்மை அதிகரித்துள்ளது.
• சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
• விவசாயம் நெருக்கடியில் உள்ளது.
• கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்துள்ளது.
• மக்கள் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
• இளைஞர்கள் மாற்றத்தை நாடுகின்றனர்.
• சாதி அடிப்படையிலான அரசியல் அணிதிரட்டல் அதிகரித்துள்ளது.
• குறிப்பாக வட மாவட்டங்களில் சாதிய அணிதிரட்டல் தீவிரம்.
• 1987க்குப் பின் சாதிய அமைப்புகள் வலுப்பெற்றுள்ளன.
• உழைக்கும் வர்க்கத்தினர் சாதி அடிப்படையில் பிளவுபட்டுள்ளனர்.
• பல கட்சிகள் ஒரு நபரை மையப்படுத்தியே இயங்குகின்றன.
• சாதிய அணிதிரட்டலை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
• உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயல்கிறது.
• பல ஊடகங்கள் இடதுசாரிகளுக்கு எதிராக செயல்படுகின்றன.
• தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
• பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
• தீண்டாமை இன்னும் வலுவாக நிலவுகிறது.