tamilnadu

img

கேரளா முழுவதும் வெற்றிக் கொடி

பாலக்காடு, மே 14- கேரள தொழிற்பயிற்சி நிலையங்களில்  (ஐடிஐ) நடைபெற்ற மாணவர் சங்க தேர் தல்களில் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மாணவர் சங்கம் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.  திருவனந்தபுரம் மாவட்டத்தில் நடை பெற்ற தேர்தல்களில் ஏழு ஐடிஐ-களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. தாணுவச்ச புரம், மலைகீழ், களமச்சல், வர்க்கலை ஆகிய ஐடிஐ-களில் போட்டியின்றி வெற்றி பெற்றது. தேர்தல் நடைபெற்ற சாக்கா,  ஆரியநாடு, அட்டிங்கல் ஆகிய இடங்க ளில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் தனிப்பெரும்பான்மை யுடன் வெற்றி பெற்றனர்.

பாலக்காடு மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற அனைத்து ஐடிஐகளிலும் எஸ்எப்ஐ பெரும் முன்னேற்றம் கண்டுள்  ளது. மலம்புழா, நெம்மாரா, வாணியம் குளம் ஐடிஐகளில் அனைத்து இடங்களி லும் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  தேர்தல் நடைபெற்ற அட்டப்பாடி, ஸ்ரீகிருஷ்ணாபுரம், குழல்மண்டம் ஆகிய ஐடிஐ-களில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. கொழிஞ்சாம் பாறை ஐடிஐயில் ஜெனரல் கேப்டனைத் தவிர அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆறு  ஐடிஐகளிலும் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. செங்குன்றம் மகளிர் ஐடிஐ-யில், ஒரு இடம் தவிர மீத முள்ள இடங்களில் எஸ்எப்ஐ போட்டி யின்றி வெற்றி பெற்றது. செங்கனூர், பள்  ளிப்பட்டு, காயம்குளம், புறக்காடு, வய லார் ஆகிய அரசு ஐடிஐகளில் தேர்தல் நடை பெற்றது.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஐடிஐகளிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. மாவட்டத்தில் உள்ள பத்து அரசு ஐடிஐகளில் ஒன்பது ஐடிஐ களில் எஸ்எப்ஐ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. மலப்புறம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஐடிஐகளிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது.  தேர்தல் நடைபெற்ற 5 ஐடிஐகளில் 3 வளாகங்கள் எம்எஸ்யு- கேஎஸ்யு கூட்டணி யிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இரண்டு ஐடிஐகள் தக்கவைக்கப்பட்டன. காசர்  கோடு மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஐடிஐ களில் ஏழு ஐடிஐ-களில் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்எப்ஐ தலைவர்கள் வாழ்த்து தெரிவித்  தனர்.