தஞ்சாவூர், ஜூலை 26 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கால்நடை மருத்துவக்கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இதில் படித்து வரும் 3,4,5 ஆம் ஆண்டு மாண வர்களுக்கு பயிற்சி மற்றும் பிற கல்லூரி களுக்குச் சென்று பயிற்சி எடுக்க அரசு சார்பாக மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3,4,5 ஆம் ஆண்டு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் நர்மதா மற்றும் பேராசிரியர்கள், அலு வலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களின் கோரிக்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று மாணவர்கள் தங்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.