tamilnadu

img

மீண்டும் துளிர்த்தது வெனிசுலா-ஹோண்டுரஸ் உறவு

தெகுசிகல்பா, பிப்.2- லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலாவும், ஹோண்டுரசும் மீண்டும் அரசு ரீதியிலான தங்களது உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டுள்ளன. இரு அரசுகளின் தரப்பில் உறவு களைப் புதுப்பித்துக் கொள் வதற்கான உடன்பாடுகளில் வெனி சுலாவிற்கான ஹோண்டுரசின் தூத ரும், ஹோண்டுரசுக்கான வெனிசுலா வின் தூதரும் கையெழுத்திட்டு ஆவ ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். அதோடு, ஹோண்டுரசின் தலை நகர் தெகுசிகல்பாவில் உள்ள அரசு அரண்மனையில் நடைபெற்ற நிகழ் வொன்றில் ஹோண்டுரசின் வெளி யுறவுத்துறை அமைச்சர் என்ரிக் ரெய்னாவிடம் ஆவணங்களைப் பரி மாறிக் கொண்டதாக வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெலிக்ஸ் பிளாசென்சியா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்பிருந்த வலதுசாரி அரசின் வெறுப்புக் கொள்கையை மாற்றிக் கொண்டதற்காக சியாமரோ காஸ்ட்ரோ தலைமையிலான இடது சாரி அரசுக்கு வெனிசுலா வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டுள் ளது. இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் உறவு துளிர்த்துவிட்டது என்று பெலிக்ஸ் பிளாசென்சியா அதி காரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த உறவு புதுப்பிக்கப்பட்டதன் மூலம் லத்தீன் அமெரிக்க மற்றும் ஒன்றிய அமெரிக்க ஒற்றுமையைக் கட்ட முடியும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். மேலும் வலதுசாரித் தலைவரான ஹெர்னாண்டஸ் காலத்தில் தலை நகர் தெகுசிகல்பாவில் இருந்த வெனி சுலா தூதரகத்தில் இருந்து பொருட்கள் களவாடப்பட்டது பற்றி  விசாரணை நடத்த வேண்டும் என்று  வெனிசுலா கோரியுள்ளது. கொள்ளையடித்தவர்கள் பற்றி விசாரித்து அவர்களுக்கு உரிய தண்ட னை பெற்றுத் தர வேண்டும் என்றும்,  பொருட்களை மீட்டு மீண்டும் தூத ரகத்தில் வைக்க வேண்டும் என்று வெனிசுலா வலியுறுத்தியுள்ளது. சீனாவுடனான தனது உறவை யும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்  செல்ல சியாமரோ காஸ்ட்ரோ தலை மையிலான அரசு முடிவெடுத்திருக் கிறது. ஹோண்டுரஸ் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும் வகை யிலான உடன்பாடுகள் எட்டப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப் பட்டுள்ளது.