tamilnadu

img

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்

சென்னை,ஏப்.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை(ஏப்.13) நடைபெற்ற கால்நடை பராமரிப்பு துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில ளித்து பேசிய அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 16 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில், தொலைதூர கிரா மங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் கால்நடை மருத் துவ சேவைகளை வழங்குவ தற்காக 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ரூ.86 கோடியில் வழங்கப்படும். வள்ளலாரின் 200வது பிறந்த  நாளை முன்னிட்டு ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் மற்றும் பல் வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை  நிறுவனங்களுக்கு உதவி அளிப் பதற்கு ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ ரூ.20 கோடியில் துவங்கப்படும்.

ரூ. 25 கோடி செல வில் 37 கால்நடை மருத்துவ நிலை யங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்படும். நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் மையங்களாகவும், அறிவுசார் மையங்களாகவும், விரிவாக்க மையங்களாகவும் விளங்கும் கால்நடை மருத்துவ  நிலையங்க ளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக முத்தமிழ் அறி ஞர் டாக்டர். கலைஞர் அவர்க ளின் நல்லாசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ரூபாய் 25.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் 37 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.  செட்டிநாடு, கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை, கோழி க்குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன  ஆலை ஆகியவை ரூ.15 கோடியில்  நிறுவப்படும்.  தொலைதூரகிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிக ளுக்கு சிறப்பு கால்நடை சுகாதார  மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.