‘வைக்கம் வெற்றி முழக்கம்’ என்ற தலைப்பில் திண்டுக்கல்லில் திராவிட கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆனந்த முனிராஜ் தலைமை வகித்தார். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பங்கேற்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திராவிடர் கழக பேச்சாளர் மதிவதனி, ஐ.பி. செந்தில்குமார் எம்எல்ஏ, திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநகரச் செயலாளர் ஏ.அரபு முகமது ஆகியோர் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் எழுதிய “உலகத் தலைவர் பெரியார்” எனும் நூல் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட நிர்வாகி வீரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.