சென்னை,மார்ச் 17- தமிழகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி ஒன்றே பேராயுதமாக கருதப்படு வதால் ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்க ளுக்கு நாடு முழுவதும் மார்ச் 16 ஆம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரில் சென்று செலுத்தப் படுகிறது. தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதல் நாளில் 50 ஆயிரம் சிறுவர்களுக்கு இந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் 12-14 வயது பிரிவில் 21.21 லட்சம் சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தி இத்திட்டத்தை நிறைவு பெற செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் கூறுகையில்,“ வருகிற நாட்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.