மோடி அரசின் கொள்கைகளால் சரிந்த ஏற்றுமதி நூல் விலை உயர்வால் 70% உற்பத்தி முடக்கம் - வே.தூயவன்
இந்தியாவின் பின்னலாடை தலை நகரமாகத் திகழும் திருப்பூரில் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஆறேழு மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. தற்போது நூல் விலை இறங்கு முகமாக உள்ள போதும் பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. காரணம் என்ன? மிகப்பெரும் நிறுவனங்களில் இருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வரை எல்லா நிலைகளிலும் வேலை வாய்ப்பு கடுமையாக சுருங்கிப் போயுள்ளது. அதேபோல் ஏற்றுமதி ஆடை உற்பத்தியும், உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு பிரதான காரணமாக சொல்லப் பட்டாலும் கூட, வெளிநாட்டு சந்தை யிலும், உள்நாட்டு சந்தையிலும் மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக சரிந்து போயுள்ளதால், இங்கிருந்து உற்பத்தி செய்து அனுப்பப்பட்ட ஆடைகள் விற் பனையாகாமல் தேங்கிப் போயிருப்ப தாக இந்த தொழில் துறையினர் தெரி விக்கின்றனர். இந்த நிலையில் புதிய ஆடை உற்பத்திக்கு தொழில் துறையினர் தயா ராக இல்லை. எனவேதான் ஆலைகள் உற்பத்தி சுருங்கி, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது.
கடந்த காலங்களிலும் இதுபோல் சந்தையில் ஆடைகள் விற்பனை ஆகா மல் தேங்குவதும், இங்கு உற்பத்தி குறை வதும், தொழிலாளர் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதும் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் இப்போது ஏற் பட்டிருக்கும் நிலை, கடந்த காலத்தை விட மிகவும் கடுமையானதாக உள்ளது என்று திருப்பூரில் நீண்ட காலம் தொழில் நடத்தி வரக்கூடிய உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். நூல் விலை உயர்வால் இழுபறி
ஏற்றுமதி நிறுவனங்களைப் பொருத்த வரை புதிய ஆடைகள் தயாரித்துக் கொடுப்பதற்கு வெளிநாட்டு வர்த்தகர் கள் தொடர் விசாரணை மேற்கொண்டிருக் கின்றனர். எனினும் விலை நிர்ணயிப்பது பிரச்சனையாக உள்ளது. உயர்ந்திருக் கும் நூல் விலைக்கு ஏற்பத்தான் ஆடை விலையை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் நூல் விலை குறைந்து வருவதை சுட்டிக்காட்டி, ஆடை விலையை குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என வெளிநாட்டு வர்த்தகர்கள் கேட்கின்றனர். இந்த இழுபறி நிலை காரணமாக புதிய ஆர்டர்கள் பெற முடியவில்லை என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். மேலும் நூல் விலை ஏற்ற, இறக்கம் என்பது உங்கள் உள்நாட்டு பிரச்சனை. எங்களைப் பொறுத்த வரை நாங்கள் கேட்கும் விலையில் கொடுத்தால் புதிய ஆர்டர் தரத் தயார், இல்லாவிட்டால் நாங்கள் வேறு பக்கம் பார்த்துக் கொள்கிறோம் என்று வெளிநாட்டு வர்த்த கர்கள் பேரம் பேசுவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே ஆர்டர்களைப் பெற முடிகிறது. சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களைப் பெற முடியாமல் திண்டாடி வருகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் தொழிலாளர்களுக்கும் வேலை தர முடியவில்லை என்று அவர்கள் கூறினர்.
மணிக் கூலி
பெரிய நிறுவனங்களில் வேலை இருந்தா லும் கூட, அவர்கள் விடுதிகளில் தங்க வைத்திருக்கும் பிற மாநிலத் தொழி லாளர்களுக்குத்தான் முன்னுரிமை அடிப் படையில் வேலை தருகின்றனர். ஒப்பீட்டள வில் குறைந்த கூலி தருவது மட்டுமல்ல, அவர்களுக்கு வேலை தராவிட்டால் மொத்த மாக அவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்று விடக் கூடும் என்ற நிலை. எனவே அவர்களுக்கு வேலை தருகின்றனர். உள்ளூரில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலை தந்தாலும் மிக குறைந்த நேர வேலை, குறைவான கூலி என்ற நிலையில் பல தொழிலாளர்கள் சேர்ந்து கிடைக்கும் வேலையைப் பங்கிட்டு செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. திருப்பூரின் முன்னணி 10 நிறுவனங்களில் கூட கிளை உற்பத்தி அலகுகள் மூடப்பட்டுள் ளன. பெரிய நிறுவனங்களுக்கே இதுதான் நிலை எனும்போது மற்ற சிறு, குறு நிறுவனங்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
ஆடைகள் தேக்கம்
உள்நாட்டு ஆடை உற்பத்திப் பிரிவிலும் இதே நிலைதான் உள்ளது. லக்ஸ், அமுல், டிக்ஸி, ஈஷா என விரல்விட்டு எண்ணக்கூடிய ஏழெட்டு நிறுவனங்கள் மட்டுமே ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு சந்தைக்கு ஆடை உற்பத்தி செய்கின்றன. அந்த நிறுவனங்களிலும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஆடைகள் தேங்கியிருக்கின்றன. இதனால் அவர்களும் பெருமளவு உற்பத்தியைக் குறைத்துவிட்டனர். இதனால் ஜாப் ஒர்க் செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான பவர்டேபிள் நிறுவனங்களிலும் வேலை குறைந்துவிட்டது. ஏற்றுமதி பிரிவைப் போலவே உள்நாட்டு உற்பத்தி பிரிவிலும் சிறு, குறு நிறுவனங் களுக்கு வேலை இல்லை.
70 சதவிகிதம் உற்பத்தி முடக்கம்
மொத்தத்தில் வழக்கமான திருப்பூரின் உற்பத்தியில் ஏறத்தாழ 70 சதவிகிதம் உற்பத்தி தற்போது நடக்கவில்லை. 25 முதல் 30 சதவிகிதம் உற்பத்தி மட்டுமே நடக்கிறது. இதன் நேரடி விளைவுதான் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை. திருப்பூர் மக்கள் தொகையின் பிரதான பிரிவாக இருக்கும் உழைப்பாளர்களுக்கு வேலையும், வருமானமும் இல்லாத நிலை யில் அதன் தாக்கம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பிரதிபலிக்கிறது. உதார ணத்திற்கு தொழிலாளர்கள் பிரதான உண வான அரிசி 25 கிலோ சிப்பமாக வாங்கி வைத்துக் கொண்டு வாரத் தவணையில் பணம் செலுத்துவார்கள். வீடுதோறும் அரிசி விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறு கையில், வாரந்தோறும் ஏறத்தாழ ரூ.1 லட்சம் வசூலாகும். ஆனால் இந்த வாரம் எனக்கு ரூ.45 ஆயிரம்தான் வசூலானது என்று தெரி வித்தார். திருப்பூரில் பெரும்பாலான குடும் பங்களில் கணவன், மனைவி மற்றும் வயது வந்த பிள்ளைகள் கூட்டாக உழைத்துத்தான் வாழ்ந்து வரும் நிலை உள்ளது. இப்போதைய நிலையில் ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் வேலை முழுமையாக கிடைப்பதில்லை. கணவன் வேலைக்குச் சென்றால் மனைவிக்கு வேலையில்லை. ஓரிருவர் வேலைக்குச் சென்றாலும் குறைவான வேலையே கிடைப்பதால் வருமானமும் குறைவாகத்தான் கிடைக்கிறது. வாரம் ரூ.2 ஆயிரம் ஈட்டி வந்த பெண் தொழிலாளி ஒருவர் தற்போது வாரம் ரூ.400 கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது என்றார்.
ஒரு நிறுவனத்தில் 500 ஆடைகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் நாங்கள் எட்டு பேர் அதை பகிர்ந்து கொண்டு வேலை செய்து அதில் கிடைக்கும் சம்பளத்தைப் பகிர்ந்து கொண்டோம் என்று மற்றொரு பெண் தொழிலாளி கூறினார். ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த வர் கூறும்போது, இங்கு வாடகைக்கு குடி யிருப்போர் அனைவரும் பெரிய தொழிற்சாலை களில் மாத சம்பளத்தில் வேலை செய்யக்கூடி யவர்கள்தான். ஆனால் அவர்களுக்கே தற்போது மாத சம்பளம் முழுமையாக சீராக கிடைக்காத நிலை உள்ளதாக கூறுகின்றனர். இதனால் வீட்டு வாடகை தருவதிலும் பாக்கி வைப்பது, ஒரு மாதம் கழித்து தருவது என்ற நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
‘சாம்பிள்’ வேலை கூட இல்லை
அதேபோல் “சாம்பிள் டெய்லர்” எனப்படும் தொழிலாளிகளுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும். புதிய ஆர்டர்கள் அதிகம் வரும்போது தான் சாம்பிள் ஆடைகள் தயாரிப்பதில் அவர்கள் பணி முக்கியமானது. அவர்களுக்கே வேலை இல்லை என்றால் புதிய ஆர்டர், உற்பத்தி நடக்கவில்லை எனப் பொருள். இப்போது சாம்பிள் டெய்லர்களுக்கே வேலை இல்லை என்ற நிலைதான் உள்ளது.
காலியாகும் வீடுகள்
பெரும்பாலும் தொழிலாளர் குடியிருப்பு களில் பல வீடுகள், வரிசை வீடுகள் ஏராள மாக காலியாக இருக்கின்றன. நகரிலும் வழக்க மான போக்குவரத்து பரபரப்பு குறைந்து போயுள்ளது. சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள், தேநீர்க்கடைகள், உணவகங்கள் என அனைத்து வியாபார கடைகளிலும் விற்பனை யும் குறைந்து போயுள்ளது. ஒரு பெண் தொழிலாளி கூறுகையில், எங்கள் நிறுவன முதலாளி கொரோனா காலத்தில் கூட எங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் இப்போது வேலை இல்லாத நிலையில் கடன் கேட்டால் கூட பணமில்லை என்று சொல்கிறார். கொரோனா காலத்தை விட தற்போது நிலைமை மிக மோசமாகத்தான் உள்ளது என்றார். தமிழக அரசிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ, தொழிலாளர் துறையிலோ திருப்பூர் தொழில், உற்பத்தி, வேலை வாய்ப்பு தொடர்பாக சரியான தரவுகள், புள்ளிவிபரம் இல்லை. எனவே இப்போதைய மோசமான நிலை குறித்து ஒரு தெளிவான சித்திரத்தை அரசு புள்ளிவிபரம் மூலம் பெற முடியாது. ஆனால் ஒட்டுமொத்த திருப்பூரின் சமூக வாழ்க்கை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இப்போதும் கூட ஏதோ ஒரு குறிப்பிட்ட நாட்களிலோ, வாரங்களிலோ, ஓரிரு மாதங்களிலோ கூட இந்த நிலைமை மாறி விடக் கூடும். ஆனாலும் 1990களின் வளர்ச்சிக் காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதே நிதர்சனமான நிலை என்று தொழில் துறையினர் பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.
வசந்த காலத்தை அழித்த பாஜக அரசு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒன்றிய ஜவுளி, வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வளர்ச்சியின் எடுத்துக் காட்டாக திருப்பூரை பாருங்கள் என படாடோபமாகப் பேசினார். ஆனால் பாஜக அரசின் அடுத்தடுத்த கொள்கைகள் இந்த நகரை நிலைகுலையச் செய்து பழைய வசந்த காலத்தில் இருந்து இருண்ட காலத்தை நோக்கித் தள்ளிவிட்டது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நூல் விலை உள்ளிட்ட மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஒட்டுமொத்த உள்நாட்டு சந்தை வீழ்ச்சி, மக்களின் வாங்கும் சக்தி சரிந்தது என எல்லாமாக சேர்ந்து திருப்பூரைக் கேள்விக் குறியாக்கி விட்டது. அதன் நடைமுறை அனுபவத்தைத்தான் மிகப்பெரும்பான்மை உழைக்கும் மக்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மேலே உள்ளபடி தெரிவித்துள்ளனர்.