அமெரிக்க அரசு பிற நாடுகளின் மீது தன்னிச்சையாகத் தடை விதிக்கும் செயல், தனக்கு நன்மை இல்லாமல் பிறருக்கு தீங்கு விளைவித்துள்ளதாக அண்மையில் அமெரிக்கா வின் சில செய்தி ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஆப்கானிஸ்தான் மீதான பைடனின் பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 20ஆண்டுகளில் போர்களால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பைத் தாண்டக் கூடும் என்ற தலைப்பில் யுஎஸ்ஏ டுடே செய்தித்தாள் கடந்த 10ஆம் நாள் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஆப்கன் மத்திய வங்கியின் 700கோடி அமெரிக்க டாலர் சொத்தை பைடன் அரசு முடக்கி வைத்ததால், அந்நாட்டின் மனித நேய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் பாதியளவான 2கோடியே 28லட்சம் மக்கள் தொகை பட்டினியால் இன்னல்பட்டுள்ளது. மேலும், 2006ஆம் ஆண்டு முதல் வெனிசூலா மீது அமெரிக்கா தடை நடவடிக்கை மேற்கொண்டதால், 80லட்சம் மக்கள் வெனிசூலாவிலிருந்து வெளியேறிச் சென்றனர். இந்த எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் 30விழுக்காடாகும் என்று மியாமி ஹெரால்டு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.