tamilnadu

img

மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு: மகளிர் ஆணையம் தலையிட வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 26 - சென்னை ஐஐடி மாணவி பாலியல் வல்லு றவு வழக்கில்  மாநில மகளிர் ஆணையம் தலை யிட மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர்  ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரியை வெள்ளியன்று (மார்ச் 25) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் வி.பிரமிளா ஆகியோர் சந்தித்து  மனு அளித்தனர். அதன் சுருக்கம் வருமாறு: சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி பார்வதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5  ஆண்டுகளாக 7 மாணவர்கள் தொடர் பாலி யல் வல்லுறவு, துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து புகார் செய்த மாணவியை உதவி பேராசிரியர் சாதி ரீதியாக அவமானப்படுத்தியுள்ளார். எனவே  உள்புகார் கமிட்டியில் மாணவி புகார் செய்தார். புகார் கமிட்டி விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பி னும், முதல் குற்றவாளி மாணவியின் அந்த ரங்க பகுதிகளை செல்போனில் படம் எடுத்த  விவரங்கள் அறிக்கையில் இல்லை. இருப்பி னும், குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து மாணவிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணைய தலையீட்டிற்கு பிறகு, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலை யத்தில் குற்றவாளிகள் 8 பேர் மீது வழக்கு  பதியப்பட்டது. வழக்கு பதிந்து 9 மாதங்க ளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. குற்றவாளிகளை விசாரணைக்குக் கூட காவல்துறை அழைக்கவில்லை.

அவர்களது செல்போன்களில் உள்ள ஆபாச புகைப்படங்களைக் கூட காவல்துறை பெறவில்லை. மாணவி தலித் சமூகத்தை சார்ந்தவராக வும், குற்றவாளிகள் பிற சமூகத்தினராகவும் உள்ளதால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்திருக்க வேண்டும். மகளிர் ஆணையம் சட்ட அந்தஸ்து பெற்ற அமைப்பு என்பதால், குற்ற வாளிகளுக்கு சம்மன் அனுப்பி விசார ணையை மேற்கொள்ள வேண்டும். காவல் துறைக்கும், ஐஐடி நிர்வாகத்திற்கும் பரிந் துரைகளை அனுப்பி வைக்க வேண்டும். ஐஐடி நிர்வாகத்தின் உள்புகார் கமிட்டி  உடனடியாக தனது இறுதி அறிக்கையை நிர்வாகத்தில் கொடுக்கவும், அதன் அடிப் படையில் நிர்வாகம் இந்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் ஆணையம் தலையிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது.